#navlist ul { margin-left: 0; padding-left: 0; white-space: nowrap; } #navlist li { display: inline; list-style-type: none; } #navlist a { padding: 3px 10px; } #navlist a:link, #navlist a:visited { color: #fff; background-color: #036; text-decoration: none; } #navlist a:hover { color: #fff; background-color: #369; text-decoration: none; }

Sunday, October 10, 2010

தமிழில் எந்திரன் - சாத்தியமா?

  நிச்சயமாக தமிழில் எந்திரன்  பட விமசர்னம் கிடையாது. ஆனால் உண்மையாகவே  எந்திரன் படத்தில் வரும் எந்திரன் முழுவதும் தமிழில் பேசுவது, தமிழில் பாடுவது, ஆடுவது, சிந்திப்பது என எல்லாம் தமிழாக இருக்கின்றது. உண்மையாக தமிழில் எந்திரன் வேண்டுமென்றால் என்ன அவசிய தேவை.
இன்னமும் தமிழை அடிப்படையாக வைத்து முழுமையான  மின் அகராதியே உருவாக்கப்படவில்லை.மேலும்  தமிழ் ஓசிஆர்,தமிழ்  ஸ்பீஸ் ரெகனைசேசன் மென்பொருட்கள் இன்னமும் முழுமை பெறாமல் இருக்கும்போது இவையெல்லாம் சாத்தியமா?

இவைகளெல்லாம் சாத்தியமானால்

எதிர்கால உலகிற்கு  மெயின்பிரேம் கணினிகளும், இந்த எந்திரன்கள் மட்டுமே போதும்.
மென்பொருளுக்கும் தமிழ் எந்திரனுக்கும் என்ன சம்பந்தம்னு கேட்கறிங்களா?
எந்த ஒரு  இயந்திரம் செயல்படுத்தப்பட வேண்டுமென்றால் எந்திரனுக்கு நம்ம தர்ற தகவல்கள் எல்லாம் மென்பொருட்கள் வழியாகத்தானே அனுப்பப்போறோம். அப்ப அந்தந்த வேலைகளுக்கு அந்தந்த மென்பொருள் தேவைதானே. எந்திரனை உருவாக்க என்ன தேவை என்று சொல்லியிருந்தாலும் எந்திரன் என்று வரும்போது சில பகுதிகள் தானாகவே உள்ளிணைந்துவிடும். ஒன்று அதிநவீன கேமிராக்கள், ஆங்கில ஒலி உணர்விகள், சிபியு என ஒரு எந்திரனுக்கான அனைத்தும் சாதாரண எந்திரனில் வந்துவிடும்.

தமிழ் கலைச்சொற்கள் களஞ்சியம்

எதுவா இருந்தாலும் முதலில் சொற்கள் முக்கியம். பிறந்த குழந்தைக்கு நாம் முதன் முதலில் அம்மா, அப்பா என்று எப்படி சொல்லித்தருகிறோமா அப்படித்தான்  இந்த எந்திரனுக்கும் தமிழில் அமைந்துள்ள அத்தனை வார்த்தைகளும் தேவைப்படும். இதற்கு தமிழில் கலைச்சொற்கள் மிக முக்கியம். இருக்கின்ற அத்தனை வார்த்தைகளுக்கும் பொருட்களோடு நாம்  அதற்கு கொடுத்தாக வேண்டும். மிக மிக அடிப்படையாக விசயம் இதுதான். ஆனால் இப்போது இருக்கும் கலைச்சொற்கள் எல்லாம் பத்தவே பத்தாது. ஏனெனில் நம் தமிழ் எந்திரனுக்கு எல்லா வகையான சொற்களையும் மனிதர்கள் பேசும் விதத்தினையும் நாம் விளக்கியாகவேண்டும்.
ஏனெனில் எந்திரன் ஒரு முட்டாள் வேலையாள். எனவே அவரிடம் நாம்தான் விளக்கிச்சொல்லவேண்டும்.
 
ஒலிஉணர்வி

தமிழ் கலைச்சொற்கள் களஞ்சியம் முடித்தபின் முக்கியமான விஷயம் இந்த ஒலிஉணர்விதான். ஏனெனில் மதுரை காரர்கள் ஒரு மாதிரியும், நெல்லைக்காரர்கள் ஒரு மாதிரியும், வெளிநாட்டவர்கள் ஒரு மாதிரியும் பேசுவார்கள். எனவே இம்மாதிரியான பேச்சுக்கள் அனைத்தையும் நாம் ஒருங்கிணைத்து ரோபோவின் சிபியுவில் ஏற்றிவிட்டால் ரோபா எல்லா வகையா பேச்சு வழக்குகளையும் உணர்ந்துவிடும். மேலும் மனிதர்களின் உணர்ச்சிகளின் ஏற்போது ஏற்படுகின்ற ஒலிகளையும் நிச்சயமாக ஒருங்கிணைக்கவேண்டும். ஏனெனில் ஆபத்து நேரத்தில் அய்யோ அம்மா காப்பாத்துங்க என்று கத்தும்போது அது ஒரு சந்தோசமான குரல் என்று ரோபோ உணர்ந்துவிட்டால் ஆப்பு நமக்குத்தான்.  எனவே ஒலிகளில் விலங்கினங்கள், ஊர்வன, நடப்பன, பறப்பன என இவ்வுலகில் உள்ள எல்லா சப்தங்களையும் ரோபாட்டிற்கு  உணர்த்தப்படவேண்டும்.
 
எழுத்துஉணர்விகள் - ஓசிஆர்

தமிழை அடுத்த தொழில்நுட்பத்திற்கு கொண்டு போகவேண்டுமென்றால் தமிழ் ஓசிஆர் மிக முக்கியமான ஒன்று என்பதில் சிறிய மாற்றம்கூட கிடையாது. எழுத்துஉணர்விகளை உருவாக்கு சிக்காலன மொழிகள் என்பதில் தமிழுக்கும் இடம் உண்டோ ? ஏனெனில் ஆங்கிலத்திற்கு வெறும் 26 வார்த்தைகள்தான். ஆனால் தமிழுக்கு அப்படியல்லவே, மெய்யெழுத்துக்கள் ஒவ்வொன்றுடனும் உயிரெழுத்து சேரும்போது உருவாகும் எழுத்துக்கள் உயிர்மெய்  எழுத்துகள் மொத்தம் 12x18 = 216 ஆகும். இவற்றுடன் 12 உயிர் எழுத்துக்களும், 18 மெய் எழுத்துக்களும் ஓர் ஆய்த எழுத்தும் சேர்ந்து மொத்தம் 247 தமிழ் எழுத்துக்கள்.  ஆக இவற்றிற்கு ஓசிஆர் உருவாக்கும்போது நாம் குறைந்தபட்சம் ஒரு நூறு கையெழுத்துக்களையாவது ஒப்பிடவேண்டும். அப்போதுதான் ஒரளவாவது கையெழுத்துக்களை எளிதாக கண்டறிய வழிவகை செய்யமுடியும். மேலும் எழுத்துஉணர்விகளின் பயன்பாட்டின் போது கலைச்சொற்கள் பெரிய பங்கு வகிக்கின்றன.
 
தமிழ் தேடல்தளம்

மேற்கண்ட மூன்றும் சரி. இது எதுக்கு என்கிறீர்களா? இதுவும் மிக முக்கியம்தான். ஏனெனில்  தமிழ் கலைச்சொற்கள், ஒலிஉணர்விகள், எழுத்துஉணர்விகள் என்று எல்லாம் எப்படியும் இன்னமும் சில பல வருடங்களில் மேற்கண்டவை எல்லாம் வந்துவிடும்.  அப்படி வந்துவிட்டால் நமக்கு தேவையான தகவல்களை கண்டறிய நமக்கென்று ப்ரத்யோகமாக ஒரு தேடல்தளம் வேண்டுமில்லையா? ஏன் கூகிள் கூடத்தான் தேடுகிறது என்று சொல்பவர்களுக்கு ஒரே பதில் . அது ஒரு கணிக்கப்பட்ட தகவல். துல்லிய தகவல் .  உதாரணம் என்னவென்று என்று தேடினால் என்னவென்று என்ற வார்த்தையை மட்டுமே கூகிள் தேடும். ஆனால் என்ன என்று என்ற வார்த்தைகளையும் தேட வேண்டும். எனவே தமிழ் இலக்கணத்தை அடிப்படையாக வைத்து இத்தேடல்களை உருவாக்கவேண்டும்.
கலைச்சொற்கள், ஒலிஉணர்வி, எழுத்துஉணர்வி மற்றும் தமிழ்த்தேடல் தளம் ஆகியவை உருவாக்கியபின் எந்திரனில் இவற்றை பொருத்துவதற்கு மிகுந்த சிரமம் இருக்காது. அவற்றினை ரோபாட்டிற்கு ஏற்ற மொழியில் மாற்றினால் போதுமானது.
 
எந்திரனுக்கான இயங்குதளம்

அட எந்திரனுக்கும் இயங்குதளமா?ன்னு கேட்டுராதிங்க. மேற்கண்ட எல்லாவற்றையும் எந்திரனுக்கு புரியவைக்க நிச்சயமாய் ஒரு இயங்குதளம் வேண்டும். ஏற்கனவே பல மென்பொருட்கள் இருக்கின்றன என்றாலும் இங்கேயும் தமிழுக்கென்று ஒன்று தனியாக வேண்டும்.
இதோ மைக்ரோசாப்டும் களமிறங்கிவிட்டது ரோபாட்டில்

http://www.microsoft.com/robotics/

எந்திரனுக்கான ஓபன் சோர்ஸ் மென்பொருள் 

http://www.ros.org/wiki/


இதனால் என்ன பயன்?


தமிழ் எந்திரன் உருவாகும்போது அவற்றினை அரசாங்கத்தில் உள்ள  அரசின் ஆவணங்கள் எல்லாம் முறையாக ஸ்கேன் செய்யவைத்து அவற்றினை வருடி/நெருடி வெகு எளிதாக மின்னாக்கம் செய்துவைத்துவிடலாம். தேவையேற்படும்போது தேடி பெற்றுக்கொள்ளலாம். 100 பேர் சேர்ந்து 10 வருடங்களில் செய்யும் வேலையை நம்ம தமிழ் எந்திரன் ஒரே வருடத்தில் செய்துமுடித்துவிடுவார். இவற்றுடன் ஒரு மெயின்ப்ரேம் சர்வரை இணைத்துவிட்டால் நெருடிய தகவல்கள் எல்லாம் நொடியில் சேமிக்கப்பட்டுவிடும். ரொம்ப சிம்பிள்தானே.....

பயன் ஒன்றல்ல, இரண்டல்ல ஒராயிரம் பயன் உண்டென்றாலும் நாள்தோறும் பெருகும் மக்கள் தொகையினை கணக்கில் வைத்தால் வரும்காலத்தில் மனிதர்களின் வேலையை எந்திரன் செய்யும். ஆனால் பலஆயிரக்கணக்கானோர் கதி ?




-----------------------------------------------------------------------
ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? WWW.RUPEESHOST.COM

3 comments:

தமிழ்த்தோட்டம் கருத்துக்களம் said...

மிகவும் அருமையான கருத்து

பாராட்டுக்கள்

தோழி said...

உங்கள் வலையில் follow பண்ணும் வசதி இல்லையே.. இணைத்து விடுங்கள்..

சுந்தரா said...

நல்ல பதிவு முரளி...பாராட்டுக்கள்!