#navlist ul { margin-left: 0; padding-left: 0; white-space: nowrap; } #navlist li { display: inline; list-style-type: none; } #navlist a { padding: 3px 10px; } #navlist a:link, #navlist a:visited { color: #fff; background-color: #036; text-decoration: none; } #navlist a:hover { color: #fff; background-color: #369; text-decoration: none; }

Monday, July 11, 2011

அன்னபூர்ணா - இந்தியாவின் 7வது சூப்பர் கம்ப்யூட்டர்...... சென்னையிலிருந்து.....

உலகில் அதிவேகமான கணினிகளை உருவாக்குவதில் உலகில் முன்னணி நாடுகள் போட்டிப்போட்டு செய்துவருகின்றன. அதில் நம் இந்தியாவும் ஒன்று.  இந்தியாவிலிருந்து இதுவரை 6 அதிவேக சூப்பர் கணினிகள் இயங்கிவரும் நிலையில்  தமிழகத்திற்கு மகுடம் வைத்தார்ப்போன்று
சென்னையில் உள்ள இன்ஸ்டியூட் ஆப் மேத்மெடிக்கல் சயின்ஸ் வளாக பிரிலியண்ட் வல்லுநர்கள் நாட்டின் ஏழாவது  அதிக செயல்திறன் கொண்ட சூப்பர் கணினியானஅன்னபூர்ணாவை வடிவமைத்துள்ளனர். .

1.5 டெரா பைட் மெமரி, 30 டெரா பைட் சேமிக்கும் திறன் கொண்ட இந்த அதிவேக சூப்பர் கணினி, இயற்பியல்,லாட்டிஸ் தியரி, கம்யூட்டனல் பையலாஜி போன்ற துறைகளில் ஆராய்ச்சி செய்ய பயன்படுத்தப்படும் என்று கூறியுள்ளனர். இந்த அன்னப்பூர்ணா ரூ.6 கோடி செலவில் நாட்டின் ஆராய்ச்சித் துறைக்கென வடிவமைக்கப்பட்டுள்ளது.

சரி அன்னபூர்ணாவின் செயல்திறன் எப்படி என்று பார்ப்போமா?

1). 1024 கோர் - இண்டெல் நேகலெம் 2.93GHz சிப்ஸ்
(நமது கணினிகளில் நாம் பயன்படுத்துவது 1 கோர்(core) மட்டுமே நமது கணினிகளை விட 1024 மடங்கு வலிமையுடையது இந்த கணினி.)

2).1.5 டெரா பைட் மெமரி
நாம் இப்போது பயன்படுத்துவது  1 GB RAM . 1.5 TB=1500 GB RAM)

3)30 டெரா பைட் ஸ்டோர்ஜ் = 30 TB (1024 gb= 1 TB)

12 டெராபிளாப் வேகம் கொண்ட அன்னபூர்ணா நம் நாட்டின் மூன்றாவது மிக அதிக செயல்திறன் கொண்ட கணினியாக கருதப்படுகிறது.

இதே போன்று பெங்களூரில் உள்ள இண்டியன் இன்ஸ்டியூட் ஆப் சயின்ஸ் ஒரு கணினியையும்,டாடா இன்ஸ்டியூட் ஒரு கணினியையும் முன்பு வடிவமைத்து உள்ளன.

அன்னபூர்ணா இண்டியன் இன்ஸ்டியூட்டின் நான்காவது அதிக செயல்திறன் கொண்ட கணினியாகும்.

ஏற்கனவே கப்ரு,விந்தியா,ஆரவள்ளி ஆகிய முதல் மூன்று கணினிகள் இன்னும் செயல்பாட்டில் உள்ளன.

நாட்டின் 15 இன்ஸ்டியூட்களை இணைக்கும் பணியை செய்யும் கருடா கிரிட் நிறுவனத்திற்காக கப்ரு சூப்பர் கணினி செய்கிறது.



ஆனால் என்ன ஒரு விசயம்...

மின்சாரத்தை நிறைய சாப்பிடும் :)

 சுட்டிக்கம்ப்யூட்டரை உருவாக்கிய நம்மூர் ஆட்களுக்கு வாழ்த்துக்கள்


----------------------------------------------------------------------------------------------------
ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------

Thursday, July 7, 2011

வெவ்வாலும், செல்போன் கதிர்வீச்சும்

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.

இன்று மாலை என்னோட செங்குதிரையில் வந்துட்டு இருந்தப்ப....... திடீர்னு ஒரு வெவ்லவால்  என் மேல வந்து மோதியது.

அப்பத்தான் என்சிற்றறிவுக்கு எட்டியது.
வெவ்வால் கள் தான் வெளியிடும் நுண்ணலைகள் மூலம் எங்கெல்லாம் தடை வருகிறதோ அவைகளை  கண்டறிந்து மாறி சென்றுவிடும். அப்படியிருக்கு இது எப்படி என் மேல் மோதியது...

நான் நின்ற இடத்தில் ஒரு 100 அடி தூரத்தில் செல்போன் டவர் இருந்தது. ஒருவேளை டவரிலிருந்து வெளிவரும் நுண்ணலைகளால் வெவ்வால்களின் நுண்ணலைகள் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டதா?

இதுபற்றி சமீபத்தில்தான் படித்தேன். ஒரு புத்தகத்தில்
நெடுந்தூரம் பறக்கும் பறவைகள் தற்பொது தடம் மாறி பறப்பதாகவும் இதற்கு முக்கிய காரணம் செல்போன் கதீர்வீச்சுக்கள்தான் என்று..
இது உண்மையா?









ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------

Saturday, July 2, 2011

தமிழக அரசின் லேப்டாப் திட்டம் - பாதுகாப்பானதா..?



" இலவசமாக மாணவர்களுக்கு லேப்டாப் தந்தாலும் அதன் பயன் என்னவென்று அனைவரும் அறிந்துகொள்ளவேண்டும். ஏனெனில் நாம் அவர்களை இந்த லேப்டாப் கொடுத்து வரவேற்க விருப்பது கணினியுகத்திற்கும், மாயவலையான இணயத்திற்கும் அழைப்பிதழ். சற்று தடம் மாறினாலும் மாயவலையின் அடிமையாகிவிடுவார்கள்"


தமிழக அரசின் லேப்டாப் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் திட்டம் எல்லா தரப்பிலும் வரவேற்கப்பட்டாலும்  முழுமையான பாதுகாப்பு இல்லாமல் வெளியிடுவது ஆபத்தான ஒன்று. மேலேகண்ட வளர்ந்த நாடுளில் உள்ள குழந்தைகள் கணினிக்கே அடிமையாகிவிட்ட செய்தியும் இருக்கிறது என்பதினை நாம் மனதில் கொள்ளவேண்டும்

முதலில் உலகம் முழுதும் உள்ள  இளம்வயதினர்  பற்றியும் அவர்கள் கணினி சார்ந் த பொருட்களில் செலவிடும் நேரத்தையும் அறிந்துகொள்ளலாமா?

  • 66%  8- முதல்18-வயதுள்ளவர்களிடம் சொந்த செல்போன் 
  • 76% சதவித குழந்தைகளிடம் ஐபாட் உள்ளிட்ட எம்பி ப்ளேயர்கள்
  • 28% மட்டுமே எவ்வளவு நேரம் கணினியை பயன்படுத்தவேண்டும் என்றும் தெரிகிறது.
  • 30% மட்டுமே தெரிகிறது கம்ப்யூட்டர் கேம்ஸ்ன் விதிமுறைகள்
  • 36% மட்டுமே தெரிகிறது கம்ப்யூட்டரை பயன்படுத்தும் விதிமுறைகள்
  • மீடியாவிற்கு( தொலைகாட்சி, கம்ப்யூட்டர் கேம்ஸ், இணையம்) ஆகியவற்றிற்கு மிகஅதிகமாக அடிமையாகிறார்கள்
  • ஒரு நாளைக்கு ஆடியோ, கணினி, வீடியோ கேம்ஸ் மற்றும் படம் பார்த்திலயே அதிகப்படியான நேரத்தினை செலவிடுகிறார்ள்
  • இணையத்தில் சோசியல் தளங்களிலும், விளையாட்டுகளிலும், வீடியொக்களை பார்ப்பதிலுமே நேரம் அதிகமாக செலவாகிறது
  • 74% o7வது முதல் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் எல்லா சோசியல் தளஙகிறது

இப்படி உலகம் முழுதும் குழந்தைகள் /மாணவர்கள் டிஜிட்டல் யுகத்தில் பெரும்பான்மையான நேரத்தினை செலவிடப்படுகிறது என்ற  அதிர்ச்சி தகவல்  ஒரு புறமிருக்க...

பாமர மாணவ/மாணவியர்கு  லேப்டாப் என்பது வரவேற்கத்தக்கது என்று பாமரர்கள் போல் நாமும் நினைத்தால் அது நிச்சயமாக தவறு..

நம் நாட்டில் தொழில்நுட்ப சட்டத்திட்டங்கள் இன்னமும் முழுமையாக இல்லை. அப்படியெனும் பட்சத்தில் சட்டத்திட்டங்கள் மிகவும் சரியாக இருக்கவேண்டும்.இல்லாவிட்டில் வளர்ந்துவரும் இளம் முறை தவறான வழியில் செல்லாமல் இருக்கும். சமீபத்தில் வெளிவந்த கணக்கெடுப்பில் இந்தியாவின் இந்த நூற்றாண்டில் இளைஞர்கள்தான் மிக அதிகமாக இருப்பார்கள் என்று தெரியவந்துள்ளது. மேலும் வளர்ந்துவரும் யுகத்தில் தொழில்நுட்பம் தெரிந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரித்துவருகிறது. எனவே வளரும் தலைமுறை தொழில்நுட்பம் கற்க வரும்போது வேறு ஏதாவது தளம் வரும். அப்படி வரும்போது  அவர்கள் தடம்மாறினால் அது இன்னமும் சிக்கலாய் முடியும்... ஏனெனில் இளைஞர்களை சரியான பாதையில் செல்ல வழிகாட்டாவிடில் சிக்கல் சமூகத்திற்குத்தான்...

நம் அரசு இலவசமாக லேப்டாப் உடன் தமிழ் தட்டச்சு கீபோர்ட்டு என்று எல்லாம் தருகிறார்கள். ஆனால் ஒரு எச்சரிக்கை!!

கட்டுரை படிக்கும் எல்லாரும் கூகிளில் தேடலில் "அம்மா" என்று தேடிப்பாருங்கள். கிருஷ்ணகிரியில் நடைப்பெற்ற தமிழ் இணையப்பயிலரங்கில் இதை தேடிப்பார்த்த நாங்களே அதிர்ந்துதான் போனோம்.


இப்படியிருக்க மாணவர்கள் இணையத்தில் ஏதாவது தேடப்போய் கிடைத்தால் இது போன்று கிடைத்தால் சிலர் அல்லது பலர் தடம் மாற வாய்ப்புள்ளது. மேலும் பள்ளிகளுக்கும், மாணவர்களுக்கும் இணையத்தை பயன்படுத்துவதில் சட்டத்திட்டங்களும், கட்டுப்பாடுகளையம், தேவையற்ற தகவல்களையும் கட்டுப்படுத்தும் வகையில் மாற்றங்களை செய்தபின் லேப்டாப்களை தரவைக்கலாம். 

மேலும் தமிழை வளர்க்க தேவையான பணிகளை செய்ய ஆட்கள் இல்லையே என்று எல்லலோரும் வருந்திக்கொண்டிருக்க. நம் ஆட்கள் இதுபோன்ற விசயங்களை வளர்ந்துகொண்டிருக்கிறார்கள் சத்தம் இல்லாமல்...

. இவையெல்லாம் கட்டுப்படுத்தாவிடில் சிக்கல்கள் நிச்சயமாக வளரும் சமூகத்திற்குத்தான்

முதலில் என்னென்ன பிரச்னைகள்:

கணினியில் மேல் உள்ள ஆர்வம் ஒருவேளை அவர்கள் கணினிக்கே அடிமையாகிவிட்டால் முதலுக்கே மோசமாகிவிடும்.

இணையமும், இணையத்தில் உள்ள சோசியல் தளங்களும் மாணவர்களின் பெரும்பான்மையான நேரத்தினை எடுத்துக்கொள்கிறது. 

சைபர் சட்டம் பற்றி தெரியாமல் சைபர் குற்றம் சார்ந்த ஏதேனும் குற்றத்தை செய்துவிட்டால்

தேவையில்லாமல் இணையத்தையும் கணினியையும் அதிகமாக பயன்படுத்தினால் படிப்பும் குறையும், கணினி சார்ந்த நோய்களும்வரும்....

இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்....

சரி இவ்வளவு பிரச்னைகள் இருக்கிறது. எப்படி சரி செய்ய

இந்த பிரச்னைக்கான லகான் அரசு மட்டும் அரசு சார்ந்த நிறுவனங்கள் மூலமே செய்ய முடியும். அல்லது பெற்றோர்களின் கண்காணிப்பு இருக்கவேண்டும். அப்படியும் இல்லையெனில் மாணவ/மாணவியருக்கு சைபர் கிரைம் சட்டத்திட்டங்கள் தெரிந்திருக்கவேண்டும். மேலும் சுயக்கட்டுப்பாடும் வேண்டும்

அரசாங்கம் என்ன செய்யவேண்டும் ?

 தேவையான தளங்களை மட்டுமே பார்க்க முடியும்படி செய்யலாம்.

சமூக இணையத்தளங்களை குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே பயன்படுத்த செய்யலாம்.

பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு மின்னஞ்சல் முகவரி நேரடியாக பள்ளியில் இருந்து தரும் வசதி. 

ஆபாச வார்த்தைகள் தேடினாலும் கிடைக்காமல் செய்யவேண்டும்.  

அரசாங்கமே ஒரு பொதுவான இணையத்தளத்தை வெளியிட்டு அதிலியே மாணவர்களுக்கு தேவையான மென்பொருள்கள் , தேடும் வசதி, மின் புத்தகம் வசதி , கல்விக்கான வீடியோ என்று எல்லா இணைப்பையும் தரலாம்.

இவைகளெல்லாம் தனித்தனியாக செய்யப்படாமல் அரசாங்கமே ஒரு பொதுவான DNS SYSTEM வழியாக மேற்கண்ட பணிகளை எல்லாம் செய்யலாம்.
பெற்றோர்கள் என்ன செய்யவேண்டும்?

மேலும் பெற்றோர்கள் தேவையற்ற இணையதளங்களை வேண்டாமென்று சொன்னால் அதை தடுக்க தனி மென்பொருள்.

முடிந்தவரை கணினியை அவர்களின் படுக்கையறையில் வைக்காமல் பொது இடத்தில் வைத்தால் கணினியை அதிகமாக பயன்படுத்துவது குறையும்.

அவர்கள் கணினியின் வழியாக என்ன செய்யவேண்டும் என்று சொல்லித்தரவேண்டும்.

மாணவ/மாணவியர்கள் என்ன செய்யவேண்டும்

தங்களுக்கென தனி இலக்கை நிர்ணயித்து அதற்கேற்றார்ப்போல் சரியான பாதையில் பயணிக்கவேண்டும். 

இவற்றில் முக்கியமான லாகன் அரசாங்கத்திடமும், பெற்றோர்களிடமும்தான் இருக்கிறது. எனவே இதையெல்லாம் அரசாங்கம் அறிந்துகொள்ளவேண்டும். 

பலவித சிக்கல்கள் உள்ள இந்த விசயத்தை அரசாங்கம் சாதாரணமாக எடுத்துக்கொண்டு செயல்படுவது ஆச்சரியமாகத்தான் உள்ளது.
இது குறித்து அரசாங்கத்திற்கு விழிப்புணர்வு வேண்டும்.


இவையெல்லாவற்றையும் விட மிக முக்கியமாக கூகிள் நிறுவனத்திற்கு இதுபோன்ற வார்த்தைகள் தேடினால் தளத்தை ஓபன் செய்யாதிருக்க அல்லது தேடலில் காட்டாமல் இருக்க கேட்டுக்கொள்ளப்படவேண்டும். கூகிள் மட்டுமல்லாமல் எல்லா தேடல் தளங்களும் இதை செய்யவேண்டும்.


இல்லாவிடில் சிக்கல் யாருக்கு?


............... .....................................................................உங்கள் எண்ணத்திற்கே......


-----------------------------------------------------------------------------------------
ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------