#navlist ul { margin-left: 0; padding-left: 0; white-space: nowrap; } #navlist li { display: inline; list-style-type: none; } #navlist a { padding: 3px 10px; } #navlist a:link, #navlist a:visited { color: #fff; background-color: #036; text-decoration: none; } #navlist a:hover { color: #fff; background-color: #369; text-decoration: none; }

Saturday, September 29, 2012

அண்டத்தின் அற்புதங்கள்- ஆன்டிராய்டு மென்பொருள்

Learn Univerce in TAMIL


வணக்கம் நண்பர்களே!!


எங்களின் மூன்றாவது ஆன்டிராய்டு மென்பொருளாக அண்டத்தின் அற்புதங்கள் என்ற வானியல் பற்றிய தகவல்களை தமிழில் உள்ளடக்கிய மென்பொருளை வெளியிட்டுள்ளோம்.
பயன்படுத்திவிட்டு  கருத்துங்கள்

இணைப்பு
https://play.google.com/store/apps/details?id=com.visualmediatech.vmspace

=----------------------------------------------------------------------------------------------
ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------

Thursday, August 9, 2012

ஆன்டிராய்டில் மென்பொருட்களை நிறுவுவது எப்படி?

என்னதான் ஆன்டிராய்டு அலைபேசி இயங்குதளம் கட்டற்ற மென்பொருட்களாக வந்தாலும் வந்தது இன்று நோக்கியா, மைக்ரோசாப்டு, ஐபேடு புகழ் ஆப்பிள் நிறுவனத்திற்கும், பெரிய கலக்கமே வந்துவிட்டது.


பின்னே இருக்காத, அலைபேசியை தன்னுள்ளே வைத்திருந்த பிளாக்பெர்டி கூட ஆடிப்போய்விட்டது. அந்த அளவிற்கு ஆன்டிராய்டு எங்கும் எப்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நாம் இப்போது ஆன்டிராய்டு நிறைய பேர் வாங்கினாலும் அதில் மென்பொருட்களை தேவைப்படும் மென்பொருட்களை எப்படி நிறுவுவவது என்று தெரியவில்லை.

அதைத்தான் பார்க்கப்போகின்றோம். ஆன்டிராய்டு போன்ற நவீன நுட்ப(ஸ்மார்ட) அலைபேசிகள் மிகப்பெரிய பலம் வாய்ந்தவை. ஆனால் அவற்றினை நாம் பயன்படுத்துவதில்தான் அதன் பணியே இருக்கின்றது.

எனவே ஆன்டிராய்டில் மென்பொருட்களை நிறுவுவது எப்படி என்று பார்க்கலாம்.

அதற்கு முன்னர் எல்லா இயங்குதளங்களுக்கும் இயங்கும் சில நீட்சிகள் (Extensions) உள்ளன. 


மைக்ரோசாப்ட் . இயங்குதளம் - EXE


மைக்ரோசாப்ட் எம்படட் - .CAB


லினக்ஸ் - sh

இப்படி பலவகையான நீட்களில் இயங்கும். அதேபோல் ஆன்டிராய்டில் இயங்கும் மென்பொருட்களுக்கு சில நீட்சிகள் உள்ளன. 


அதுதான் .APK - Android Package (APK) file

சரி இந்த மென்பொருளை நேரடியாக இயக்க முடியுமா? முடியும் என்றாலும் பாதுகாப்பு காரணம் கருதி கூகிள் நிறுவனம் பொதுவான ஒரு இடத்தில் பதிந்துவைத்துள்ளது. எந்த மென்பொருட்கள் வேண்டும் என்றாலும் அங்கே இருந்து பெற்றுக்கொள்ளலாம். அந்த பொதுவான இடத்திற்கு பெயர்தான் Market தற்போது Play Store. 

சரி, கூகிள் நிறுவனம் ஏன் இப்படி செய்கிறது.தேவைப்படுபவர்கள் எல்லாம் அப்படியே நேராக இன்ஸ்ட்டால் செய்யலாமே என்கிறீர்களா?
ஆனால் அங்கேயும் சில பிரச்னைகள் உள்ளது. என்ன தெரியுமா? பாதுகாப்பு

ஏன் பாதுகாப்பு வேண்டும்?

நீங்கள் நேரடியாக மென்பொருளை நிறுவும் பட்சத்தில் நீங்கள் பயன்படுத்தும் ஆன்டிராய்டு அலைபேசி/ டேப்ளேட் உங்களுக்கே தெரியாமல் உங்களைப்பற்றிய தகவல்களை வேறு ஒருவருக்கு மாற்றும் ஸ்பை வேலையை செய்துவரும்.

அல்லது வைரஸ்களை இன்ஸ்ட்டால் செய்யும்.

இப்படி தனித்தனியாக மென்பொருட்களை நிறுவினால் நிறைய பிரச்னைகளை வரும் என்பதை கருத்திக்கொண்டே எல்லா நிறுவனங்களுக்கும் தனக்கென்று ஒரு மென்பொருள் சந்தையை உருவாக்கியுள்ளன. 






Iphone - Istore



மேற்கண்ட நிறுவனங்களின் மென்பொருட்களை நிறுவும்போது நீங்கள் நிறுவும் மென்பொருள் சரியானதா? அல்லது அதனுள் வேறு ஏதேனும் நச்ச நிரல்கள் உள்ளிணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்து அதன் பின்னரே வெளியிடுவார்கள். இதனால் அவர்களுக்கும் பிரச்னையில்லை. அவர்களின் வாடிக்கையாளர்களான நமக்கும் பிரச்னையில்லை.

இவ்வாறு நாம் பிளே அல்லது மார்க்கெட்டில் மென்பொருட்களை நிறுவும்போது சில பிரச்னைகளை சந்திக்க நேரிடும். என்னவெனில் நாம் நிறுவ நினைக்கும் மென்பொருட்களை நம்மால் நிறுவிட இயலாது. அந்த சமயத்தில் அங்கே நமக்கு ஒரு பிழை தகவல் காட்டப்படும். என்னவெனில் இந்த மென்பொருள் உங்கள் அலைபேசி (டேப்ளேட்) ஒத்திசை ( Comp ability) இல்லை. என்று.


காரணம்
நமக்கு நமது அலைபேசி/ டேப்ளேட்களில் நிறுவிட நினைக்கும் மென்பொருட்களை உருவாக்கியவர் இதை ஒரு குறிப்பிட்ட கருவிகளில் அல்லது குறிப்பிட்ட அளவுகளில் உள்ள மென்பொருட்களில் மட்டுமே நிறுவிட முடியும் என்று அதற்கேற்றார்ப்போல் அந்த மென்பொருட்களை உருவாக்கியிருப்பார். அந்த குறிப்பிட்ட கருவிகளில் மட்டுமே அந்த மென்பொருட்களும் இயங்கும். அவ்வளவுதான் வித்தியாசம்

திரை அளவு


எப்படியெனில் நாம் அலைபேசியை பயன்படுத்தினால் அதன் திரை அளவு 320x240, 800*480 என்று வரும். அதே சமயத்தில் பெரிய டேப்ளேட் கணினிகளில் பல திரை அளவுகள் இருக்கும். இப்படி பல அளவுகள் உள்ளதால் அந்த மென்பொருள் வடிவமைப்பாளர் குறிப்பிட்ட திரை அளவுகளுக்கு மட்டுமே அனுமதி அ ளித்திருப்பார். அந்த அளவுகள் கொண்டவற்றில் மட்டுமே நிறுவிடவும் முடியும்.



மென்பொருட்கள் ஒத்திசைவு

சில மென்பொருட்கள் மேம்பட்ட ஆன்டிராய்டு இயங்கு தளத்தில் மட்டுமே மென்பொருட்களை நிறுவிட வழிவகை செய்யும். எனவே அவற்றினையும் நம்மால் நிறுவிட இயலாது.

ஆனால் எல்லா மென்பொருட்களையும் நிறுவிட வழிவகைகள் உண்டு என்றாலும் நாம் நிறுவும் மென்பொருட்களை நமக்கு தீங்கு செய்யாது என்று நமக்கு என்னமிருந்தால் நிச்சயமாக நிறுவலாம்


சரி இப்போது நாம் மென்பொருட்களை நிறுவலாமா?




வழி 1 : உங்கள் அலைபேசி அல்லது டேப்ளேட் கணினியில் இந்த குறும்படம் உள்ளதா என்று பாருங்கள் . இருந்தால் கிளிக் செய்யவும்


வழி 2: முதல்முறை பயன்படுத்துபவராக இருந்தால் உங்களுக்கான தனி கணக்கினை துவக்கும் படி அறிவுறுத்தும். பின் ஒரு முறை கணக்கு விபரங்களை கொடுத்து சேமித்துவிட்டால் மீண்டும் மீண்டும் தானாகவே எடுத்துக்கொள்ளும். கணக்கு இல்லாதவர்கள் உருவாக்கிக்கொள்ளவும். இருப்பவர்கள் உங்கள் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை தந்து உள்ளே செல்லவும்






வழி 3 : 






மேலே உள்ள Search Button உள்ள இடத்தில் கிளிக் செய்தால் உள்ளீட்டு பெட்டி ஒன்று தோன்றும் அதில் உங்களுக்கு தேவையான மென்பொருளின் பெயரினை தட்டச்சு செய்த கடைசியில் உள்ள பூதக்கண்ணாடியை :) கிளிக் செய்தால் விபரங்கள் காட்டப்படும். அதில் உங்களுக்கு தேவையான மென்பொருளை கிளிக் செய்தால் கீழ்க்கண்டது போல் காட்டப்படும்.


பின் அந்த திரையில் Install என்ற பட்டனை அழுத்த வேண்டும்





வழி 4




அந்த மென்பொருள் இயங்க என்னென்ன அனுமதி தேவை மற்றும் அந்த மென்பொருள் நம்முடைய அலைபேசி/டேப்ளேட் கணினியில் என்னென்ன மென்பொருட்களுடன் இயங்கும் என்பது போன்ற தகவல்கள் இருக்கும். அதன்பின் accept & Download என்பதினை கிளிக் செய்தால் உங்களுக்கு தேவையான மென்பொருள் உங்கள் அலைபேசி/ டேப்ளேட் கணினிகளில் நிறுவப்படும்.

மேற்கண்ட இதே வழிமுறைகளை பயன்படுத்தி உங்களுக்கு தேவையா மென்பொருட்களை நீங்கள் நிறுவிக்கொள்ளலாம். முக்கியமாக ஒன்று. நீங்கள் தரவிறக்கும் மென்பொருள் உங்களுக்கு உபயோகமானதாக இருந்தால் தயவு செய்து அந்த மென்பொருளுக்கு நட்சத்திர மதிப்பை வழங்குங்கள். அது அந்த மென்பொருள் உருவாக்குநருக்கு ஊக்கமாக இருக்கும்
நன்றி!


------------------------------------------------------------------------------------------------------------
ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------

Wednesday, August 8, 2012

ஆன்டிராய்டு மென்பொருட்கள் அறிமுகம்!


         

வணக்கம் நண்பர்களே!!

எங்கள் நிறுவனம் ஆன்டிராய்டு அடிப்படையிலான CPAD டேப்ளேட்களை (கையடக்க கணினிகளை) வெளியீட்டு வருவது நீங்கள் அறிந்ததே!

தற்போது அந்த டேப்ளேட்களை தமிழை அடிப்படையாக வைத்து பல்வேறு மென்பொருட்களை உருவாக்கியும் வருகின்றோம்.

கழுகுவீரன்

குழந்தைகளுக்கான காமிக்ஸ் புத்தம் என்பது எப்போதும் எல்லாரோலும் விரும்பத்தக்கது. அதனடிப்படையில் எங்கள் நிறுவனம் எங்கள் நிறுவனத்தின் ஆலோசகரான திரு.ரத்தினகிரி , CA அவர்களின் உதவியோடு முழுதும் டிஜிட்டல் அடிப்படையிலான கழுகுவீரன் என்ற காமிக்ஸ் புத்தகத்தினை உருவாக்கியுள்ளோம். இதனை முழு பகுதிகளை ஒவ்வோன்றாக ஒவ்வொரு பகுதியாக தர உள்ளோம். பத்தரிக்கைகளில் வாரம் தோறும் படிக்கும் பழக்கம் எவ்வாறோ அதே போன்ற உருவாக்கலாம் என்ற எண்ணத்தில் இதனை உருவாக்கியுள்ளோம்.
விரைவில் தமிழில் காமிக்ஸ் படிப்பதற்கென்று  தனியாக சில மென்பொருட்களையும் உருவாக்கவருகிறோம்

மர்பி விதிகள்


அதனோடு தொழில்துறையில் புகழ்பெற்ற எதிர்விதிகளுக்கு சொந்தக்காரரான திரு.மர்பி அவர்களின் விதிகளையும் தமிழில் மொழி பெயர்த்து அதனையும் ஆன்டிராய்டு அடிப்படையில் கொடுத்துள்ளோம்.
எனவே அவைகளை நீங்கள் பயன்படுத்திப்பார்த்துவிட்டு கருத்துக்களை கூறலாம்.

மேலும் மாணவர்களின் கல்வி சம்பந்தமான மென்பொருட்களின் உருவாக்கத்திற்கு தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர்.


நன்றி!

-------------------------------------------------------------------------------

ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------

Sunday, June 24, 2012

தண்ணீர் பிரச்னையை போக்க முதலில் குளங்களையும், ஏரிகளையும் ஒன்றிணையுங்கள்!!!




தேசிய நதிகளை ஒன்றிணைக்கலாம் என்று பல்வேறு அரசாங்கங்கள் பெரும்முயற்சி எடுத்து பின் இதை ஒன்றிணைக்க ஆகும் செலவிற்கு நிதிகளை திரட்ட பெரும் பணி என்று பல்வேறு சிக்கல்கள் காரணமாக அரசாங்கங்கள் இதை கைவிட்டுவிட்டன. ஆனால் பெரும் செலவு செய்து தேசியை நதிகளை ஒன்றிணைத்தாலும் அதன் பின்னும் சிக்கல்கள் நிச்சயமாக வரும். எப்படியெனில் ஒரு வேலை அதிகப்படியான தண்ணீர் வந்தால் அவற்றை எப்படி முறையான மேலாண்மை செய்யலாம்என்ற திட்டம் இல்லையெனில் நமக்கு சிரமமே.

ஆனால் 2500 வருடங்களுக்கு முன்பே வாழ்ந்த மக்கள் தண்ணீர் மேலாண்மையில்சிறந்து விளங்கியுள்ளனர். உதாரணம் நம்முடைய கரிகால்சோழன் கட்டிய கல்லணை. கடல்வெள்ளம் போல் வந்த காவிரியின் இருபுறம் தூர் எடுத்து சிறப்பான முறையில் கால்வாய்களை வெட்டி மிகப்பெரிய நிர்பாசன முறையை நம்மக்கள் மேற்கொண்டு வந்துள்ளனர். மேலும் அவர்களின்கடல்துறைமுகமான பூம்புகாரில் கப்பல் போக்குவரத்திற்கு ஏற்றவாறு அமைத்துள்ள முறையினை வரலாற்று அறிஞர்கள் இன்றும் வியக்கின்றனர்.

 கடந்த 1800 வருடங்களாக நம்மை ஆண்டு வந்த மூவேந்தர்கள் அவர்களுக்கு அடங்கியசிற்றரசர்கள்எல்லாரும் ஏதாவது ஒரு போரில்வெற்றிப்பெற்றால் அதன் நினைவாக ஏரிகளை வெட்டினர். அதன் மூலம் ஏரியை சுற்றிஉள்ள எல்லா இடங்களிலும் உள்ள மக்களுக்கு அவர்களின் விவசாயத்திற்கு தண்ணீர் கொண்டு சேர்த்தனர். இது நமக்குகணக்கு தெரிந்து 2500 வருடங்களாக செய்துகொண்டு வந்துள்ளனர். அதிலும் காஞ்சியை ஆண்டபல்லவர்கள் பலஏரிகளைவெட்டி ஒரு ஏரியில் தண்ணீர் அதிகமாக வந்தால் இன்னொரு ஏரிக்கு கொண்டு செல்லும் வழியில் உள்ள எல்லா ஊர்களில் உள்ள குளங்களுக்கும்  தண்ணீர் செல்லும் வகையில் அமைத்தனர்.

இவ்வாறெல்லாம் தண்ணீர் மேலாண்மையை கடைபிடித்ததால் நிலத்தடி நீர்மட்டமும் சரியாக இருந்து வந்துள்ளன என்றே சொல்லாம்.

ஆக முறையான தண்ணீர் மேலாண்மையை மிகச்சரியாக செய்துவந்தவர்கள் நாம். ஆனால் இன்று தண்ணீர் தண்ணீர் என்று அடித்துக்கொள்கின்றோம். போதாக்குறைக்கு தேசிய நதிகளை ஒன்றிணைக்கலாம் என்கின்றனர்.

எது எப்படியிருந்தாலும் அடிப்படைகளை மிகச்சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். முதலில்குளங்கள், ஏரிகள் ஆகியவற்றை ஒண்றிணைத்துவிட்டு அதன்பின் உள்ளூர் ஆறுகளையும், நதிகளையும் ஒன்றிணைத்தபின் வேண்டுமானால் தேசிய நதிகளை ஒன்றிணைக்கலாம். இந்த அடிப்படை அம்சங்களை ஒன்றிணைப்பதன் மூலம் நமக்கு நிலத்தடி நீர்மட்டமும் உயரும்  அதே சமயத்தில் அதைபயன்படுத்தி விவசாயமும் கூடும். 

சரி குளங்களையும், ஏரிகளையும், ஆறுகளையும் எப்படி ஒன்றிணைக்கலாம்.?

நாம் செய்யவேண்டிய தேவை எதுவுமே இல்லை. ஏற்கனவே எங்குஎங்கெல்லாம் குளங்களும்,ஏரிகளும் இருந்துள்ளனவோ அவைகளை நாம் மீண்டும் பயன்படுத்த ஆரம்பித்தாலே போதும். நம் முன்னோர்கள் எங்கெல்லாம் ஏரிகள் வெட்டியுள்ளார்களோ அவைகளை ஒரு பக்கம் ஆற்று நீர் வரத்திற்கும், இன்னொரு புறம் இன்னொரு ஏரிக்கு நீர் செல்லும் வழிகளையும் ஏற்படுத்தியுள்ளனர். .
அவற்றினை நாம் முறையாக தூர்வாரி பயன்படுத்தினாலே போதுமானது

இதற்கு நாம்முதலில்செய்யவேண்டியது கூகிள்மேப்பில் நம் ஊர்களின் ஏரியின் இருப்பிடத்தினை புளூ கலர் கொண்டு அடையாளப்படுத்தினாலே போதும். தொழில்நுட்பங்கள் வழியாக அவர்களின் பாதைகளை நாம் எளிதாக அறிந்துகொள்ளலாம்.

மேலும் அரசாங்கத்தின் 100 நாள் வேலை வாய்ப்புத்திட்டத்தினைஇதுபோன்ற பணிகளுக்கு பயன்படுத்தலாம்.


-----------------------------------------------------------------------------------------
ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------

Monday, May 14, 2012

ஒரு நொடியில் +2 ரிசல்ட்.



இம்முறை +2 ரிசல்ட்களை  http://www.chennaikalvi.com என்ற இணையதளத்தின் வாயிலாக வெளியிட இருக்கிறோம். இதற்காக 21 நாடுகளில் இருந்து இயங்கும் சர்வர்களை ஒரே கட்டமைப்பில் கொண்டுவந்து Global Cache என்ற நுட்பத்தில் செயல்படும். வகையில் உள்ளதால் ஒரே ஒரு  நொடியில் தேர்வு முடிவுகளை காணலாம்.

இன்னொரு சிறப்பம்சம். இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டாலும் அப்போது கொடுத்தஎண்ணிலிருந்து 100 எண்களின் முடிவுகளையும் காணும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

http://chennaikalvi.com/



ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------

Sunday, April 1, 2012

ஆன்டிராய்டு-ல் தமிழை நிறுவுவது எப்படி?


வணக்கம் நண்பர்களே!!

ஆன்டிராய்டு 4 அடிப்படையிலான கணிப்பலகையை ( Tablet) எங்கள் நிறுவனம் 
வெளியிட்டது. ஆனால் அதில் தமிழ் ஒத்திசைவு இல்லாத காரணத்தினால் அதன்  வெளியீடு தள்ளிக்கொண்டே போனது. இது குறித்து பல்வேறு விவாதக்களங்களில் காணப்பட்ட செய்தி என்னவெனில் 

ஆன்டிராய்டு , விண்டோஸ் அடிப்படையிலான கணிப்பலகைகள்(tablet) மற்றும் அலைபேசிகளுக்கு தமிழ் ஒத்திசைவை  தரவில்லை. ஆகையால் ஓபேரா வை நிறுவி அதன் வழியாக மாற்றங்களை செய்து தமிழ்  செய்திகளை படித்திருந்தோம்.

ஆனால் 

ஆன்டிராய்டு 1.6 -ல் தமிழை பயன்படுத்தி தட்டச்சு செய்திட தமிழ்விசை தமிழா குழுவினரால் கொண்டுவரப்பட்டு பின் அனைவரும் பயன்படுத்த ஏதுவாக இருந்தது.

எனவே நிச்சயமாக இது எழுத்துரு சம்பந்தமான பிரச்னையாகத்தான் இருக்கும் என்று என்று எண்ணி தேடியபோது நிச்சயமாக இது எழுத்துரு பிரச்னையாகவே இருந்தது.

என்னவெனில் ஆன்டிராய்டு தன்னுடன் வழங்கும் எழுத்துருக்களில் தமிழ் உட்பட பல மொழிகளுக்கான எழுத்துருக்கள் சேர்க்கப்படவில்லை. எனவே அதன் தன்னியல்பான எழுத்துருவான DroidSansFallback எழுத்துருவில் யுனிகோடு அடிப்படையிலான தமிழ் இடங்களில் தமிழ் எழுத்துக்கள் இல்லை. எனவே பான்ட் கிரியேட்டர் வழியாக தமிழ் எழுத்துருவை  சேர்க்கலாம் என்று முயற்சித்தேன். ஆனால் வேறு ஒரு குழுவில் வேறு மொழி பிரச்னைக்கு மைக்ரோசாப்ட்-ன் லதா எழுத்துருவை DroidSansFallback  என பெயர் மாற்றம் செய்து பாண்ட் கோப்பில் இட்டால் எல்லா மொழியையையும் காணலாம் என்று கூறியிருந்தார்கள்.

அதனடிப்படையில் லதா எழுத்துருவை ரீநேம் செய்தும் பாண்ட் கோப்பில் இட்டும் தமிழ் கட்டம் கட்டமாகவே வந்தது. கடைசியாக எல்ஜி ஆப்டிமைஸ் -ல் சமீபத்திய அப்டேட்டிற்கு பிறகு தமிழ் வசதி வந்தது நினைவில் வந்தது. எனவே அதில் இருந்த Framework.jar என்ற பைலை root\system\framework -, கணிப்பலகைக்கு மாற்றி ரீஸ்டார்ட் செய்தவுடன் ஆன்டிராய்டு 4 வெகு சிறப்பாக தமிழ் மொழியை காட்டியது :)

கூடவே தமிழ் விசை வழியாக தமிழும் சிறப்பாக தட்டச்சவும் முடிந்தது.  ஆனால் சில இடங்களில் முழுமையாக ரெண்டரிங் ஆகவில்லை என்றாலும் தட்டச்சு செய்து பதிந்த பின் மிகச்சரியாக தமிழ் வந்தது. 

எனவே ஆன்டிராய்டு எல்லா பதிப்புகளுக்கும் கீழ்க்கண்ட எழுத்துருக்களை நிறுவி தமிழ் உட்பட எல்லா மொழியினையும் கொண்டுவரலாம்.

மேலும் திரு.தகடூர் கோபி அவர்கள் பல்வேறு விதமான எழுத்துருக்களை யுனிகோடு வடிவில் வெளியிட்டுள்ளார். எனவே எழுத்துரு மாற்றம் வேண்டுபவர்கள் அந்த எழுத்துருக்களை தரவிறக்கம் செய்து பெயர் மாற்றி ஆன்டிராய்டுல் பயன்படுத்தலாம் வித விதமான எழுத்துருக்களுடன் :)

எச்சரிக்கை.சில மொபைல்களில் ரூட்டிங் வசதியை அனுமதிப்பதில்லை.   இல்லையேல் உங்கள் மொபைலின் வாரண்டி போய்விடும். எனவே கவனமாக பயன்படுத்தவும்


ஆன்டிராய்டில் தமிழு எழுத்துருக்கள் தரவிறக்க
http://dl.dropbox.com/u/8548231/droidfonts.zip

ரூட்டிங்கிற்கு பயன்படுத்திய மென்பொருள்


நமக்கு பிடித்தமான எழுத்துருக்களை சேர்க்க

ஏற்கனே TAM அடிப்படையில் உள்ள எழுத்துருக்களை யுனிகோடுக்கு மாற்றி ஆன்டிராய்ட் உட்பட எல்லா மொழிகளிலும் கொண்டு வர வழிமுறைகள் பற்றி திரு.தகடூர் கோபி அவர்கள் எழுதியுள்ள கட்டுரை

----------------------------------------------------------------------------------------
ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------

Tuesday, January 24, 2012

மின்னாளுமை திட்டங்களில் சமூகதளங்கள் - 01


2011 ம் வருடங்களில் சமூக இணையத்தளங்கள் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளன என்பது யாராலும் மறுக்கமுடியாத ஒன்று.

ஆம், பல நாடுகளில் புரட்சி வெடிக்கவும், ஒருமித்த கருத்துக்களை உடைய குழுக்களை ஒன்றிணைக்கவும் பாலமாக விளங்கியது இந்த சமூக இணையத்தளங்கள். மேலும் ஜப்பானில் மிகப்பெரிய சுனாமி ஏற்பட்ட போது மற்ற நுட்பங்கள் எல்லாம் ஸ்தம்பிக்க சமூக இணையத்தளங்கள் வழியாக அங்கேயுள்ள மக்களின் நிலைமையை அறிந்துகொண்டதும், அங்கே பாதிக்கப்பட்டவர்கள் தமது குடும்பங்களுக்கு தாங்கள் பத்திதிரமாள்ளது பற்றியும் சமூக இணையத்தளங்களின் வழியாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டபோது அவர்களின் குடும்பத்தினர்கள் சகஜ நிலைக்குள்ளானதும் தகவல்களில் தெரிய வந்தது.

ஆக இவைகளெல்லாம் சமூகத்திற்கு ஒரு மிகப்பெரிய சேவை ஆற்றி வருகின்றன என்பது உண்மையே .

நாணயத்தின் இருபக்கத்தினைப்போல் சமூக இணையத்தளங்களுக்கும் நன்மை/தீமை என்ற இரு பக்கம் உள்ளது. சமூக இணையத்தளங்கள் ஒரு மாய உலகம். உள்ளே செல்ல செல்ல பிரபஞ்சத்தின் விரிவடையும் பக்கம் போல நீண்டு கொண்டே செல்லும் உலகம். 
அது ஒரு புறம் என்றால் சமீபகாலமாக கருத்து சுதந்திரம் என்ற ஒன்று இன்று எல்லாரையும் ஆட்டிப்படைக்கிறது. சமீபத்தில் கபில் சிபில் கூட இந்தியாவில் இயங்கும் சமூக இணையத்தளங்களின் நிர்வாகிகளை அழைத்து பேசியது நினைவிருக்கலாம்.
எனவே அரசாங்கங்கள் சமூக இணையத்தளங்களை கட்டுப்படுத்தி அவைகளை பூதாகரமாக வெடிக்கும் முன்னர் அவர்களோடு கரம் சேர்த்துக்கொண்டால் நிச்சயமாக சமூகத்திற்கு மிகப்பெரிய மாற்றம் கிடைக்கும்.  ஏனெனில் ஒரு அரசாங்கத்தினையே மாற்றும் திறன் இந்த சமூக இணையத்தளங்களுக்கு உண்டு.

 தற்போதைய அமெரிக்க அதிபரான ஓபாமே தன்னுடைய வெற்றிக்கு சமூக இணையத்தளங்களை பயன்படுத்திக்கொண்டாரே அப்போதே இதன் பலம் வெளிபட்டுவிட்டது .

எனவே சமூக இணையத்தளங்கள் தனி அரசாளும் முன் அரசாங்கம் அவற்றினை தன்னோடு இணைத்துக்கொண்டு பயனித்தால் யாவருக்கும் பிரச்னையில்லாமல் பயனிக்கலாம். ஆனால் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய மாற்றங்களை தரலாம்.....


சரி அரசாங்கமும் சமூகஇணையத்தளங்களும் இணைந்தால் என்ன பயன்?

 முதல்படியாக அரசாங்கம் தம் மின்னாளுமை திட்டங்களில் ஒரு பகுதியாக  சமூக இணையத்தளங்களுடன் கைகோர்த்து சமூகத்திற்கு பயனளிக்கும் வகையில் மிகப்பெரிய மாற்றங்களை செயல்படுத்தலாம். பைசா செலவில்லாமல்

ஆம், அரசாங்கத்திற்கு முக்கிய பிரச்னையே பணப் பற்றாக்குறைதானே. அந்த பண பிரச்னையே இல்லாமல் இதன் வழியாக மின்ஆளுமை திட்டங்களை பைசா செலவில்லாமல் செய்யலாம்.

செலவில்லாமல் என்றால் அரசாங்கம் நிச்சயமாக முன்வரும். இதுபோன்ற பணிகளை எடுத்துச் செய்ய........... :)

அல்லது அரசாங்கம் விருப்பப்பட்டால் தன்னார்வக்குழுக்களுடன் இணைந்தும் தனி சமூக இணையத்தளங்களையே அறிமுகப்படுத்தலாம்.

ஏனெனில் சமூக இணையத்தளங்கள் சமூகங்களுக்காகத்தானே.....

அடுத்த பாகத்தில் அரசாங்கங்கள் ஒவ்வொரு துறையிலும் சமூக இணையத்தளங்களை எப்படி பயன்படுத்தலாம் . துறை ரீதியான விளக்கங்களுடன்........


சந்திப்பேன்................




-----------------------------------------------------------------------------------------------
ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------

Friday, January 20, 2012

தானே தாண்டவத்தில் முடங்கிய விவசாயத்தினை எப்படி மீட்கலாம்.



வணக்கம் நண்பர்களே!

"  விவசாயம் பற்றி ஒரு புத்தகத்தில் படித்தப்போது எப்படியான சூறாவளி காற்றுக்களை தடுக்கவும் வேலி மரங்கள் உள்ளன என்று கூறுகிறார்கள். அதாவது சூறாவளிகளையும் வேலியாக இருந்து காக்கும் வேலி மரங்கள் நிறைய உண்டு. அவைகளையெல்லாம் வேலியாக பயன்படுத்தி பயிர்களை காக்கலாம் "

தானே தாண்டவத்தில் கடலூர், விழுப்புரம், பாண்டிச்சேரி ஆகிய மாவட்டங்களில்  தானே ஆடிய தாண்டவம் பற்றி ஆனந்த விகடனில் விரிவாக வந்த செய்தியை படித்தபோது மனம் கனத்துத்தான் போனது.

அங்கே உள்ள விவசாய நிலங்கள் எல்லாம் சீரழிக்கப்பட்டன என்றது நாமெல்லாம் அறிந்ததே!! அதோடு மட்டுமல்லாமல் பலா, முந்திரி ஆகிய மரங்கள் எல்லாம் 75%  அழிந்தே விட்டன. மீண்டும் அவைகள் காய் காய்க்க ஒரு தலைமுறையே எடுத்துக்கொள்ளும் என்கிறார்கள்.  அதுவரை இவர்கள் எப்படி விவசாயம் செய்வார்கள். மீண்டும் பலா, முந்திரி , தென்னை போன்றவை வளர ஒரு தலைமுறை இடைவெ ளி வேண்டியிருக்கிறது.

எனவே விவசாயத் துறையில் ஆர்வமுள்ளவர்கள் ஏன் இதை ஒரு சவாலாக எடுத்து செய்யக்கூடாது. அவர்களின் வாழ்வாதாரணமான மரங்களை சீக்கிரமாக ஆனால் பாரம்பரிய முறைப்படி எப்படி மீண்டும் விரைவாக காய் காய்க்க செய்யலாம்.

ஏற்கனவே விழுந்த மரங்களை கூட அதன் தாய் மண் வைத்து சேர்த்து போதிய ஊட்டச்சத்தையும் அளித்தால் ஏன் முடியாது.

இவைற்றையெல்லாம் சோதனை முயற்சியாக பரிட்சித்துப்பார்த்தால் அடுத்தும் வரும் புயல்களில் இருந்து அவர்களையும் காக்க முடியும்.


மேலும் ஒரு வீட்டையே பெயர்த்தெடுத்து எடுத்து இன்னொரு இடத்தில் வைக்கும் நுட்பங்கள் நம்மிடம் நிறைய உள்ளது. அப்படியெனில்  மரத்தினை  பெயர்த்தெடுத்து நாம் ஏன் அங்காங்கே  வைக்க கூடாது. ?

இதை எப்படி தயார் செய்யலாம்

மரங்களின் கிளைக்கு பதியம்போடுவதை விட மரங்களுக்கே ஏன் பதியம் போடக்கூடாது. அதாவது அதன் கிளைகள் உட்பட எல்லாவற்றினையும் வெட்டிவிட்டு அதன் வேரோடு தாய் மண்ணையும் சேர்த்து 3 அடிகளுக்கு சேர்த்து பத்தியம் போட்டால் வெகு எளிதாக அவற்றினை எங்கேயும் வளர்த்துவிடலாம். ஆனால் விரைவாக....

மண் ஒப்புக்கொள்ளுமா என்று கேட்கலாம். இந்த பதிய மரம் பதியப்போகும் இடத்தில் மண்ணின் தரத்தினை ஊட்டப்படுத்தும் முறையினை கையாளலாம். மண்புழு உரம், வேப்பம் புண்ணாக்கு, பஞ்ச கவ்யா  போன்றவற்றினை சேர்த்து செய்யலாம்.

இதுபோன்ற இள மரங்களுக்கு என்ன செய்யலாம்.

மரங்கள் எங்கெல்லாம் அதிகமாக வளக்கப்படுகின்றதோ அவர்களிடம் கேட்டு வர வைக்கலாம். பலா மரங்களுக்கு தமிழ்நாட்டில் நிறைய இடங்களில் கன்றுகள் நிறைய கிடைக்கும். புதியதாக நடும் 20 கன்றுகளுக்கு ஒரு மரங்கள் என்று வைத்தால் கூட ஒரளவு பிரச்னைகளை சமாளிக்கலாம்.

முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை. :)

ஏனெனில் மக்களின் வாழ்வதாராம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ள போது அவர்களுடன் அரசாங்க இயந்திரங்களும் சேர்ந்து பாதிப்பது இயல்பு. எனவே விபரம் அறிந்தவர்கள் முயற்சிக்கலாம்



------------------------------------------------------------------------------------
ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------

Monday, January 16, 2012

தமிழர்களின் வானவியல் சி்ந்தனைகள்



நன்றி!: 


தமிழிரின் வானவியல் சிந்தனைகள் : ஆசிரியர் ஐயம் பெருமாள். உலகத்தமிழராய்ச்சி நிறுவனம் மற்றும் சென்னைப் பதிப்பகம்


தற்போது எந்த கிரகம் எங்கேயுள்ளது என்று பார்க்கவேண்டுமானால் கூகிளின் ஸ்கை மேப் துணைக்கொண்டு எங்கே இந்த கிரகம் உள்ளது என்று அறியலாம்.

ஆனால் இதே நேரத்தில் பஞ்சாங்கம் ஆட்களை அழைத்து கேட்டால் முழுமையான தகவல்களை சொல்வார்கள். எப்படி சாத்தியம் இது ? எதையும் காண முடியாது. ஆனால் அவர்கள் கூறும் தகவல்கள் மிகச்சரியாக இருக்கும்

ஆனால் செயற்கைகொள் எல்லாம் வராத ஆதிக்காலங்களில் மனிதன் எதைக்கொண்டு கணக்கினை அளந்தான் என்று பார்த்தால் தன் கணக்கால் வகுத்திருக்கிறான்.

பலங்காலத்தில் நேரத்தினை கணிக்கும் முறையினை வானத்தைக் கொண்டே கணித்தார்கள். அவர்கள் எப்படியெல்லாம் கணித்தார்கள் என்பதற்கு என்ற தகவலை தேடி பயணதித்தபோது இன்னமும் நிறைய தகவல்கள் கிடைத்தது.

சென்னைப் புத்தக கண்காட்சியில்  வாங்கி புத்தகத்தில் உள்ள சில தகவல்கள்

எல்லாம் சங்ககாலங்களில் உள்ள இலக்கியங்களில் உள்ளன. இங்கே இன்னொரு உண்மையான தகவல்களை சொல்லியாகவேண்டும். அவையெல்லாம் என்னவெனில் இன்றைய வானிலை ஆராய்ச்சிகளுக்கு முன்பாகவே வெறும் கண்களாலேயே இப்போது இந்த கிரகம் எங்கே உள்ளது என்பதை கணிக்கும் திறன் நம்மாட்களிடம் உள்ளது. அதற்கென தனி கணித சூத்திரங்களே  வைத்திருக்கிறார்கள் நம்மாட்கள்.

சிலப்பதிகாரம், பரிபாடல், திருவாசகம் உள்ளிட்டவைகள் தன்னிடத்தே அக்கால தமிழர்களின் வான்வெளி அறிவையும் வெளியிட்டுள்ளனர். பொன்னியில் செல்வனில் கூட கல்கி அவர்கள் தூமகேது என்ற நட்சத்திரம் பற்றி கூறியிருப்பார்.

அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.

அண்டப்பகுதியின் உண்டைப்பிறக்கம்
அளப்பருந்தன்மை வளப்பெருங்காட்சி

என்று மாணிக்கவாசகர் திருவாசகத்தில் கூறுகின்றார்.

எண்ணிறந்த கோளங்களை உள்ளடக்கியது பேரண்டம் என்ற பொருளின் அடிப்படையில் மேற்கண்ட வரிகள் உள்ளன என்பதை காணவேண்டியுள்ளது.


20ம் நூற்றாண்டில்  எட்வின் ஹப்பிள் இந்த பேரண்டமானது தொடர்ந்து விரிவடைந்து வருகிறது,,  பலகோடி அண்டங்கள் ஒன்றைவிட்டு ஒன்றை விட்டு ஒன்றை விளக்கமுறுகின்றன என்று கூறியுள்ளார்.

இதே கருத்தை ஒப்பிடும் வகையில் திருவாதவூராரின் திருவண்டப்பகுதியின் மூன்றாம், நான்காம் வரிகள்

ஒன்றனுக்கொன்று நின்றழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்படவிரிந்தன
என்று கூறுகிறார்.
அதாவது விரவிச்செல்லும் அண்டங்கள் அவரது பார்வையில் சூரியனது ஒளிக்கதிர் இருண்ட அறையில் செல்லும்போது அவற்றில் அலைந்து திரியும் தூசுகள் போல் எண்ணிக்கையில்  பலவாக இருப்பது போல் தெரிகிறதாம் என்று கூறுகிறார்.

நமது வான்வெ ளி ஆராய்ச்சி பற்றி நமது இலக்கியங்களில் நாம் நிறைய ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. நமது வான் வெளியியல் பற்றி தகவல்களை

  • சிலப்பதிகாரம்
  • நெடுநெல்வாடை
  • திருவாசகம்,
  • புறநானுறு
  • சீவகசிந்தாமணி
  • சூளாமணி
  • பரிபாடல்
  • மலைபடுகடாம்
  • சிறுபாணாற்றுப்படை
  • பாலகாண்டம்
  • கம்பராமாயணம்
  • குறுந்தொகை
  • கலித்தொகை
  • மணிமேகலை
  • திருக்குறள்
  • பட்டினபாலை
  • பொருநராற்றுப்படை
  • தொல்காப்பியம்


ஆகியவற்றில் வெளிரவந்துள்ளன.

எனவே இவற்றை முழுமையாக ஆராய்ச்சி செய்தால் இன்னமும் நிறைய தகவல்கள் கிடைக்கும்











ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------