#navlist ul { margin-left: 0; padding-left: 0; white-space: nowrap; } #navlist li { display: inline; list-style-type: none; } #navlist a { padding: 3px 10px; } #navlist a:link, #navlist a:visited { color: #fff; background-color: #036; text-decoration: none; } #navlist a:hover { color: #fff; background-color: #369; text-decoration: none; }

Tuesday, January 24, 2012

மின்னாளுமை திட்டங்களில் சமூகதளங்கள் - 01


2011 ம் வருடங்களில் சமூக இணையத்தளங்கள் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளன என்பது யாராலும் மறுக்கமுடியாத ஒன்று.

ஆம், பல நாடுகளில் புரட்சி வெடிக்கவும், ஒருமித்த கருத்துக்களை உடைய குழுக்களை ஒன்றிணைக்கவும் பாலமாக விளங்கியது இந்த சமூக இணையத்தளங்கள். மேலும் ஜப்பானில் மிகப்பெரிய சுனாமி ஏற்பட்ட போது மற்ற நுட்பங்கள் எல்லாம் ஸ்தம்பிக்க சமூக இணையத்தளங்கள் வழியாக அங்கேயுள்ள மக்களின் நிலைமையை அறிந்துகொண்டதும், அங்கே பாதிக்கப்பட்டவர்கள் தமது குடும்பங்களுக்கு தாங்கள் பத்திதிரமாள்ளது பற்றியும் சமூக இணையத்தளங்களின் வழியாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டபோது அவர்களின் குடும்பத்தினர்கள் சகஜ நிலைக்குள்ளானதும் தகவல்களில் தெரிய வந்தது.

ஆக இவைகளெல்லாம் சமூகத்திற்கு ஒரு மிகப்பெரிய சேவை ஆற்றி வருகின்றன என்பது உண்மையே .

நாணயத்தின் இருபக்கத்தினைப்போல் சமூக இணையத்தளங்களுக்கும் நன்மை/தீமை என்ற இரு பக்கம் உள்ளது. சமூக இணையத்தளங்கள் ஒரு மாய உலகம். உள்ளே செல்ல செல்ல பிரபஞ்சத்தின் விரிவடையும் பக்கம் போல நீண்டு கொண்டே செல்லும் உலகம். 
அது ஒரு புறம் என்றால் சமீபகாலமாக கருத்து சுதந்திரம் என்ற ஒன்று இன்று எல்லாரையும் ஆட்டிப்படைக்கிறது. சமீபத்தில் கபில் சிபில் கூட இந்தியாவில் இயங்கும் சமூக இணையத்தளங்களின் நிர்வாகிகளை அழைத்து பேசியது நினைவிருக்கலாம்.
எனவே அரசாங்கங்கள் சமூக இணையத்தளங்களை கட்டுப்படுத்தி அவைகளை பூதாகரமாக வெடிக்கும் முன்னர் அவர்களோடு கரம் சேர்த்துக்கொண்டால் நிச்சயமாக சமூகத்திற்கு மிகப்பெரிய மாற்றம் கிடைக்கும்.  ஏனெனில் ஒரு அரசாங்கத்தினையே மாற்றும் திறன் இந்த சமூக இணையத்தளங்களுக்கு உண்டு.

 தற்போதைய அமெரிக்க அதிபரான ஓபாமே தன்னுடைய வெற்றிக்கு சமூக இணையத்தளங்களை பயன்படுத்திக்கொண்டாரே அப்போதே இதன் பலம் வெளிபட்டுவிட்டது .

எனவே சமூக இணையத்தளங்கள் தனி அரசாளும் முன் அரசாங்கம் அவற்றினை தன்னோடு இணைத்துக்கொண்டு பயனித்தால் யாவருக்கும் பிரச்னையில்லாமல் பயனிக்கலாம். ஆனால் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய மாற்றங்களை தரலாம்.....


சரி அரசாங்கமும் சமூகஇணையத்தளங்களும் இணைந்தால் என்ன பயன்?

 முதல்படியாக அரசாங்கம் தம் மின்னாளுமை திட்டங்களில் ஒரு பகுதியாக  சமூக இணையத்தளங்களுடன் கைகோர்த்து சமூகத்திற்கு பயனளிக்கும் வகையில் மிகப்பெரிய மாற்றங்களை செயல்படுத்தலாம். பைசா செலவில்லாமல்

ஆம், அரசாங்கத்திற்கு முக்கிய பிரச்னையே பணப் பற்றாக்குறைதானே. அந்த பண பிரச்னையே இல்லாமல் இதன் வழியாக மின்ஆளுமை திட்டங்களை பைசா செலவில்லாமல் செய்யலாம்.

செலவில்லாமல் என்றால் அரசாங்கம் நிச்சயமாக முன்வரும். இதுபோன்ற பணிகளை எடுத்துச் செய்ய........... :)

அல்லது அரசாங்கம் விருப்பப்பட்டால் தன்னார்வக்குழுக்களுடன் இணைந்தும் தனி சமூக இணையத்தளங்களையே அறிமுகப்படுத்தலாம்.

ஏனெனில் சமூக இணையத்தளங்கள் சமூகங்களுக்காகத்தானே.....

அடுத்த பாகத்தில் அரசாங்கங்கள் ஒவ்வொரு துறையிலும் சமூக இணையத்தளங்களை எப்படி பயன்படுத்தலாம் . துறை ரீதியான விளக்கங்களுடன்........


சந்திப்பேன்................




-----------------------------------------------------------------------------------------------
ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------

Friday, January 20, 2012

தானே தாண்டவத்தில் முடங்கிய விவசாயத்தினை எப்படி மீட்கலாம்.



வணக்கம் நண்பர்களே!

"  விவசாயம் பற்றி ஒரு புத்தகத்தில் படித்தப்போது எப்படியான சூறாவளி காற்றுக்களை தடுக்கவும் வேலி மரங்கள் உள்ளன என்று கூறுகிறார்கள். அதாவது சூறாவளிகளையும் வேலியாக இருந்து காக்கும் வேலி மரங்கள் நிறைய உண்டு. அவைகளையெல்லாம் வேலியாக பயன்படுத்தி பயிர்களை காக்கலாம் "

தானே தாண்டவத்தில் கடலூர், விழுப்புரம், பாண்டிச்சேரி ஆகிய மாவட்டங்களில்  தானே ஆடிய தாண்டவம் பற்றி ஆனந்த விகடனில் விரிவாக வந்த செய்தியை படித்தபோது மனம் கனத்துத்தான் போனது.

அங்கே உள்ள விவசாய நிலங்கள் எல்லாம் சீரழிக்கப்பட்டன என்றது நாமெல்லாம் அறிந்ததே!! அதோடு மட்டுமல்லாமல் பலா, முந்திரி ஆகிய மரங்கள் எல்லாம் 75%  அழிந்தே விட்டன. மீண்டும் அவைகள் காய் காய்க்க ஒரு தலைமுறையே எடுத்துக்கொள்ளும் என்கிறார்கள்.  அதுவரை இவர்கள் எப்படி விவசாயம் செய்வார்கள். மீண்டும் பலா, முந்திரி , தென்னை போன்றவை வளர ஒரு தலைமுறை இடைவெ ளி வேண்டியிருக்கிறது.

எனவே விவசாயத் துறையில் ஆர்வமுள்ளவர்கள் ஏன் இதை ஒரு சவாலாக எடுத்து செய்யக்கூடாது. அவர்களின் வாழ்வாதாரணமான மரங்களை சீக்கிரமாக ஆனால் பாரம்பரிய முறைப்படி எப்படி மீண்டும் விரைவாக காய் காய்க்க செய்யலாம்.

ஏற்கனவே விழுந்த மரங்களை கூட அதன் தாய் மண் வைத்து சேர்த்து போதிய ஊட்டச்சத்தையும் அளித்தால் ஏன் முடியாது.

இவைற்றையெல்லாம் சோதனை முயற்சியாக பரிட்சித்துப்பார்த்தால் அடுத்தும் வரும் புயல்களில் இருந்து அவர்களையும் காக்க முடியும்.


மேலும் ஒரு வீட்டையே பெயர்த்தெடுத்து எடுத்து இன்னொரு இடத்தில் வைக்கும் நுட்பங்கள் நம்மிடம் நிறைய உள்ளது. அப்படியெனில்  மரத்தினை  பெயர்த்தெடுத்து நாம் ஏன் அங்காங்கே  வைக்க கூடாது. ?

இதை எப்படி தயார் செய்யலாம்

மரங்களின் கிளைக்கு பதியம்போடுவதை விட மரங்களுக்கே ஏன் பதியம் போடக்கூடாது. அதாவது அதன் கிளைகள் உட்பட எல்லாவற்றினையும் வெட்டிவிட்டு அதன் வேரோடு தாய் மண்ணையும் சேர்த்து 3 அடிகளுக்கு சேர்த்து பத்தியம் போட்டால் வெகு எளிதாக அவற்றினை எங்கேயும் வளர்த்துவிடலாம். ஆனால் விரைவாக....

மண் ஒப்புக்கொள்ளுமா என்று கேட்கலாம். இந்த பதிய மரம் பதியப்போகும் இடத்தில் மண்ணின் தரத்தினை ஊட்டப்படுத்தும் முறையினை கையாளலாம். மண்புழு உரம், வேப்பம் புண்ணாக்கு, பஞ்ச கவ்யா  போன்றவற்றினை சேர்த்து செய்யலாம்.

இதுபோன்ற இள மரங்களுக்கு என்ன செய்யலாம்.

மரங்கள் எங்கெல்லாம் அதிகமாக வளக்கப்படுகின்றதோ அவர்களிடம் கேட்டு வர வைக்கலாம். பலா மரங்களுக்கு தமிழ்நாட்டில் நிறைய இடங்களில் கன்றுகள் நிறைய கிடைக்கும். புதியதாக நடும் 20 கன்றுகளுக்கு ஒரு மரங்கள் என்று வைத்தால் கூட ஒரளவு பிரச்னைகளை சமாளிக்கலாம்.

முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை. :)

ஏனெனில் மக்களின் வாழ்வதாராம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ள போது அவர்களுடன் அரசாங்க இயந்திரங்களும் சேர்ந்து பாதிப்பது இயல்பு. எனவே விபரம் அறிந்தவர்கள் முயற்சிக்கலாம்



------------------------------------------------------------------------------------
ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------

Monday, January 16, 2012

தமிழர்களின் வானவியல் சி்ந்தனைகள்



நன்றி!: 


தமிழிரின் வானவியல் சிந்தனைகள் : ஆசிரியர் ஐயம் பெருமாள். உலகத்தமிழராய்ச்சி நிறுவனம் மற்றும் சென்னைப் பதிப்பகம்


தற்போது எந்த கிரகம் எங்கேயுள்ளது என்று பார்க்கவேண்டுமானால் கூகிளின் ஸ்கை மேப் துணைக்கொண்டு எங்கே இந்த கிரகம் உள்ளது என்று அறியலாம்.

ஆனால் இதே நேரத்தில் பஞ்சாங்கம் ஆட்களை அழைத்து கேட்டால் முழுமையான தகவல்களை சொல்வார்கள். எப்படி சாத்தியம் இது ? எதையும் காண முடியாது. ஆனால் அவர்கள் கூறும் தகவல்கள் மிகச்சரியாக இருக்கும்

ஆனால் செயற்கைகொள் எல்லாம் வராத ஆதிக்காலங்களில் மனிதன் எதைக்கொண்டு கணக்கினை அளந்தான் என்று பார்த்தால் தன் கணக்கால் வகுத்திருக்கிறான்.

பலங்காலத்தில் நேரத்தினை கணிக்கும் முறையினை வானத்தைக் கொண்டே கணித்தார்கள். அவர்கள் எப்படியெல்லாம் கணித்தார்கள் என்பதற்கு என்ற தகவலை தேடி பயணதித்தபோது இன்னமும் நிறைய தகவல்கள் கிடைத்தது.

சென்னைப் புத்தக கண்காட்சியில்  வாங்கி புத்தகத்தில் உள்ள சில தகவல்கள்

எல்லாம் சங்ககாலங்களில் உள்ள இலக்கியங்களில் உள்ளன. இங்கே இன்னொரு உண்மையான தகவல்களை சொல்லியாகவேண்டும். அவையெல்லாம் என்னவெனில் இன்றைய வானிலை ஆராய்ச்சிகளுக்கு முன்பாகவே வெறும் கண்களாலேயே இப்போது இந்த கிரகம் எங்கே உள்ளது என்பதை கணிக்கும் திறன் நம்மாட்களிடம் உள்ளது. அதற்கென தனி கணித சூத்திரங்களே  வைத்திருக்கிறார்கள் நம்மாட்கள்.

சிலப்பதிகாரம், பரிபாடல், திருவாசகம் உள்ளிட்டவைகள் தன்னிடத்தே அக்கால தமிழர்களின் வான்வெளி அறிவையும் வெளியிட்டுள்ளனர். பொன்னியில் செல்வனில் கூட கல்கி அவர்கள் தூமகேது என்ற நட்சத்திரம் பற்றி கூறியிருப்பார்.

அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.

அண்டப்பகுதியின் உண்டைப்பிறக்கம்
அளப்பருந்தன்மை வளப்பெருங்காட்சி

என்று மாணிக்கவாசகர் திருவாசகத்தில் கூறுகின்றார்.

எண்ணிறந்த கோளங்களை உள்ளடக்கியது பேரண்டம் என்ற பொருளின் அடிப்படையில் மேற்கண்ட வரிகள் உள்ளன என்பதை காணவேண்டியுள்ளது.


20ம் நூற்றாண்டில்  எட்வின் ஹப்பிள் இந்த பேரண்டமானது தொடர்ந்து விரிவடைந்து வருகிறது,,  பலகோடி அண்டங்கள் ஒன்றைவிட்டு ஒன்றை விட்டு ஒன்றை விளக்கமுறுகின்றன என்று கூறியுள்ளார்.

இதே கருத்தை ஒப்பிடும் வகையில் திருவாதவூராரின் திருவண்டப்பகுதியின் மூன்றாம், நான்காம் வரிகள்

ஒன்றனுக்கொன்று நின்றழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்படவிரிந்தன
என்று கூறுகிறார்.
அதாவது விரவிச்செல்லும் அண்டங்கள் அவரது பார்வையில் சூரியனது ஒளிக்கதிர் இருண்ட அறையில் செல்லும்போது அவற்றில் அலைந்து திரியும் தூசுகள் போல் எண்ணிக்கையில்  பலவாக இருப்பது போல் தெரிகிறதாம் என்று கூறுகிறார்.

நமது வான்வெ ளி ஆராய்ச்சி பற்றி நமது இலக்கியங்களில் நாம் நிறைய ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. நமது வான் வெளியியல் பற்றி தகவல்களை

  • சிலப்பதிகாரம்
  • நெடுநெல்வாடை
  • திருவாசகம்,
  • புறநானுறு
  • சீவகசிந்தாமணி
  • சூளாமணி
  • பரிபாடல்
  • மலைபடுகடாம்
  • சிறுபாணாற்றுப்படை
  • பாலகாண்டம்
  • கம்பராமாயணம்
  • குறுந்தொகை
  • கலித்தொகை
  • மணிமேகலை
  • திருக்குறள்
  • பட்டினபாலை
  • பொருநராற்றுப்படை
  • தொல்காப்பியம்


ஆகியவற்றில் வெளிரவந்துள்ளன.

எனவே இவற்றை முழுமையாக ஆராய்ச்சி செய்தால் இன்னமும் நிறைய தகவல்கள் கிடைக்கும்











ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------