#navlist ul { margin-left: 0; padding-left: 0; white-space: nowrap; } #navlist li { display: inline; list-style-type: none; } #navlist a { padding: 3px 10px; } #navlist a:link, #navlist a:visited { color: #fff; background-color: #036; text-decoration: none; } #navlist a:hover { color: #fff; background-color: #369; text-decoration: none; }

Monday, May 30, 2011

புதிய இன்டர்நெட் விதியும், நடைமுறை சிக்கல்களும்......


" இணையத்தில் பிரவுசிங் செய்யும் நபர்களை எட்டிப்பார்ப்பது அடுத்தவர்களின் படுக்கையறையை எட்டிப்பார்ப்பதற்கு சமம் எனும்போது பிரவுசிங் சென்டர் முதலாளி எப்படி அடுத்தவர் என்ன செய்கிறார் என்று பார்க்க முடியும். மேலும் அப்படி பார்த்தால் மீண்டும் அடுத்த முறை அந்த நபர்கள் திரும்பவும் அவர்களின் பிரவுசிங் சென்டர்களுக்கு வரமாட்டார்கள்."


உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் மற்றும் பேச்சுரிமையுடைய நாடான இந்தியாவில் இணைய சட்டங்கள் இன்னமும் ஒரு சாதாரண அளவில்தான் உள்ளன. 1.25 பைசாவை திருடினால் ஜெயிலில் அடைக்கும் அதேச்சட்டத்தில்  சில லட்சம் கோடிகளை ஊழல் செய்தவர்களுக்கு ஜாமீன்-ல் வெளிவிடுவதும், அவர்களை "ராஜா " மாதிரி நடத்துவருகிறது. சைபர் கிரைம் சம்பந்தப்பட்ட  நடைமுறைகள் இன்னமும் முழுமையாக அமல்படுத்தாத நிலையில் இச்சட்டங்களைப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்கள் மற்றும் வலைப்பூ பதிவாளர்களை தண்டிக்கும் செயல் அங்காங்கே நடந்து கொண்டுள்ளது.

2008ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைவரான சோனியா காந்திக்கு எதிரான கருத்துக்கள் கூகுளின் ஆர்குட்டில் பதிக்கப்பட்டது. அச்செய்தியை பதித்தவரை கைது செய்ய கூகுள், பயனாளரின் ஜபி அட்ரஸைத் தர கூகுள் முடிவு செய்தது.மற்றொரு அரசியல் கட்சியின் இமேஜ் இணையம் மூலம் சரிந்தது.

26/11 மும்பை தாஜ் ஹோட்டலை தீவிரவாதிகள் தாக்கியது தொடர்பாக வலைப்பூவில் shoddy  journalism  பற்றி எழுதியதற்காக NDTV நிர்வாக இயக்குனர் பார்கா தத் வலைப்பூ உரிமையாளருக்கு சட்டம் மூலம் நோட்டீஸ் அனுப்பினார்.

முழுமையான சட்ட விதிகள் இல்லாமல் ஏதாவது பிரச்னைகுரியஎழுத்துக்கள் என்று வரும்  வாசகரின் கருத்துக்கள் அரசியல் கட்சிக்கு எதிரானதோ இல்லையோ, போலீஸ் அந்த குறிப்பிட்ட இணையதளத்தை மூடவே முயற்சி செய்கிறது.  

சிலநேரங்களில் மேற்சொன்ன சில உதாரணங்கள் மூலம் மேம்படுத்தப்பட்ட இணைய சட்டங்கள் இந்தியாவிற்கு அவசியம் என்பதும், அடிப்படை உரிமைகளில் ஒன்றான பேச்சுரிமை இணையத்தில் மிக தவறான முறையில் பயன்படுதப்படுகிறது என்பதும் கண்ணார கண்டாலும் முழுமையான சட்டத்திட்டங்கள் விதிக்கப்படாமல் இணையத்தில் அவ்வப்போது ஏற்படும் பிரச்னைகளுக்கு மட்டும் விதிகளை எழுதிக்கொள்வது தவறான ஒன்று.

இந்நிலையில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள புதிய இணையச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதாவது,

பயனாளர்கள் மற்றவர்களை புண்படுத்தும் வகையிலான கருத்துக்களையோ, அடுத்தவரின் அந்தரங்களையோ,மற்ரவரை வெறுக்கும் கருத்துக்களையோ,சூதாட்டத்தை ஊக்குவிக்கும் வகையிலான கருத்துக்களையோ மற்றும் சட்டத்திற்கு புறம்பான எந்தவொரு கருத்துக்களையும் பதிக்கவோ,மாற்றவோ,பதிவேற்றவோ, பகிரவோ கூடாது .

நாட்டின் ஒற்றுமை,சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் பொதுவுடமையை பாதிக்கும் எந்தவொரு கருத்துக்களையும்,வெளிநாட்டு நட்புறவைப் பாதிக்கும் கருத்துக்கள், மற்ற நாடுகளை அவமானப்படுத்தும் கருத்துக்களை பதிக்கக் கூடாது...

இதில் முக்கியமான விசயம் என்னவெனில்


சர்வதேச பயங்கரவாதிகளை பதுக்கி வைத்துக் கொண்டு இல்லை என்று சொல்லும் நாட்டிற்கு எதிராய் நாம் ஏதேனும் கருத்துக்கள் பதித்தால், நம்மை ஜெயிலில் பிடித்துப் போட அரசாங்கத்திற்கு அனுமதி அளிக்கிறது மேற்சொன்ன சட்டவரிகள்.இந்தியாவில் அரசியல் கட்சி தலைவர்கள் பற்றிய எதிரான கருத்துக்களை வெளியிட்டால், அடுத்த நிமிடம் ஜெயில் களி தின்பதற்கு வழி செய்கிறது.

மேம்படுத்தப்பட்ட புதிய விதிகள் இண்டர்நெட் உரிமையாளர்களுக்கும் ஒருபுறம் பெரும் பிரச்னை. ஏனெனில். தங்கள் இணையம் மூலம் யாரும் தவறான கருத்துக்கள், சட்டத்திற்கு புறம்பான நிகழ்வுகளுக்கு பயன்படுத்தாமல் இருக்க, அதற்கென ஒரு தனி ஏஜென்சி மூலம் கண்காணிக்க வேண்டியுள்ளது.மேலும் நிர்வாண வீடியோக்கள்,படங்களை யாரும் பதிவேற்றாமல்ிருக்க, அதற்கென தனியே தடை செய்யும் மென்பொருள்களை பயன்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர்

.ஹோட்டல்களில் வாடிக்கையாளர்களுக்கு இலவச இணைய வசதி வழங்கும் போதும் இணையம் தவறான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படாமல் இருக்க, ஹோட்டல் நிர்வாகம் கண்காணித்தே தீர வேண்டும்.பதிவு செய்யப்பட்ட இணைய வசதி மையங்கள் வாடிக்கையாளர்களின் பேர், முகவரி,பாலினம்,அடையாள அட்டை, இணையம் பயன்படுத்திய நேரம் போன்றவற்றை குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளன.

மேலும் இதைவிட கொடுமை வயிற்றுப்பிழைப்பிற்காக நடத்தும் பிரவுசிங் சென்டர்களில் யாரோ சில விசமிகள் செய்யும் பிரச்னைக்காக போலீசார் நேரடியாக பிரவுசிங் சென்டர் நடத்துபவர்களை பிடித்துச்செல்கிறார்கள்.... இது மிகவும் தவறான ஒன்று. இணையத்தில் பிரவுசிங் செய்யும் நபர்களை எட்டிப்பார்ப்பது அடுத்தவர்களின் படுக்கையறையை எட்டிப்பார்ப்பதற்கு சமம் எனும்போது பிரவுசிங் சென்டர் முதலாளி எப்படி அடுத்தவர் என்ன செய்கிறார் என்று பார்க்க முடியும். மேலும் அப்படி பார்த்தால் மீண்டும் அடுத்த முறை அந்த நபர்கள் திரும்பவும் அவர்களின் பிரவுசிங் சென்டர்களுக்கு வரமாட்டார்கள்.

இதைவிட பெரிய கொடுமை... தமிழ்நாடு போலீஸ் க்கு என்று அரசு சார்ந்த மின்னஞ்சல்கள் ஏதும்  கிடையாது. அவர்களே ஜிமெயில், ஹாட்மெயில் போன்றவற்றில் மின்னஞ்சல்களை பயன்படுத்துகின்றனர். இவைகளை வெகு எளிதாக ஹேக் செய்யலாம். ஆர்பிஐ தன் வங்கிக்கு சில விதிமுறைகளை விதித்துள்ளது, என்னவெனில் வங்கி சார்ந்த எந்த ஒரு தகவலும் இந்தியாவை தவிர வேறு எந்த நாட்டின் சர்வர்களிலும் இருக்ககுடாது.

அப்படியிருக்க ஒரு போலீஸ் துறை தன் துறை சார்ந்தத பயன்பாடுகளுக்கு அரசாங்க தனி சர்வர்களை ஒதுக்காமல் அவர்கள் தனியார் நிறுவனங்களின் சேவைகளை பயன்படுத்துவது எந்த அளவிற்கு சரியானது என்று தெரியவில்லை.

இதற்கு தீர்வு என்ன

இவையெல்லாவற்றையும் அரசாங்கமே இந்தியாவின் டிஎன்எஸ் சர்வர்களில் தேவையான மாற்றங்கள் செய்தாலே போதும். ஆனால் அரசாங்கம் தன் வ(லி)ழியை மட்டுமே பார்க்கிறது. தொழில்நுட்பம் பெருகும்போது அதற்கேற்றார்ப்போல் கட்டுப்பாடுகளும் மாற்றப்படவேண்டும். ஆனால் நுட்பம் ராக்கெட் வேகத்தில் பயணிக்க கட்டுப்பாடுகள் ஆமையில் பயணிக்கிறது...





ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------

Tuesday, March 8, 2011

தென் கொரிய அரசாங்கத்தின் 40க்கும் மேற்பட்ட இணையத்தளங்கள் தகர்க்கப்பட்டது.

தென்கொரிய அரசாங்கத்தின் 40க்கும் மேற்பட்ட இணையத்தளங்களை DDOS எனப்படும் முறையின் மூலம் தாக்கி தகர்த்துள்ளனர்.

தென்கொரியாவின் வெளிநாட்டு அமைச்சகம், பாதுகாப்பு மற்றும் தேசிய இன்வெஸ்டிகேசன் துறை ஆகியவற்றோடு 40 துறைகளின் இணையத்தளங்கள் டிடாஸ் அட்டாக்கின் மூலம் தகர்க்கப்பட்டுள்ளன. இவற்றால் அந்த தளங்கள் சில மணி நேரம் இயங்காமல் இருந்துள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.



-----------------------------------------------------------------------------------------

ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------

Wednesday, February 2, 2011

உலக மொழிகளில் இணையத்தளப் பெயர்கள்


அட என்ன ஆச்சர்யத்துடன் கேட்கிறீர்கள். உண்மையாகவே இந்த வசதி தற்போது அறிமுகப்படுத்தப் பட்டு உள்ளது .

சரி ஆங்கிலத்தில்தானே வெப்சைட் பெயர்கள் இருக்கும். எப்படி மற்ற மொழிகளில் என்று கேட்கின்றீர்களா?

அதற்கு முன் டிஎன்எஸ் என்றால் என்ன பார்ப்போமா? ஏனெனில் இணையத்தின் முதுகெலும்பு இதுதானே.

Domain Name System என்பது கணினிகள், சேவைகள், அல்லது இணையம் அல்லது ஒரு தனியார் வலையமிப்பில் இணைப்புற்றிருக்கும் எந்த வள ஆதாரங்களுக்கும் வரிசையாய் பெயரிடும் முறைமையாகும். பங்கேற்கும் உறுப்புகள் ஒவ்வொன்றுக்கும் ஒதுக்கப்படும் Domain பெயர்களுடன் இது பல்வேறு தகவல்களை தொடர்புபடுத்துகிறது.

     குறிப்பாக நமக்கு பொருள்புரிவதாக இருக்கும் களப் பெயர்களை, இவை இணைய உலகளாவிய வகையில் அடையாளம் காணும் வலையமைப்பு சாதனங்களுக்கு புரிகிற எண் அடையாளங்களாக இது மொழிபெயர்க்கிறது. மனிதருக்கு எளிதான கணினி வன்பொருகளை இணைய முகவரிகளாக மொழிபெயர்ப்ப்பது இதன் பணி

. எ.கா www.tamilvanigam.com என்பது 174.122.13.74 என்கிற எண்ணாக மொழிபெயர்க்கப்படுகிறது.  
சரி இப்போது www.tamilvanigam.com என்பது 174.122.13.74 என்ற எண்ணுடைய சர்வரில் இயங்குகிறது என்று டிஎன்எஸ் ப்ரோகாலானது வழிகாட்டும்.

 இதுவே தமிழில் தமிழ்வணிகம்.காம் என்று கொடுத்தால் 174.37.210.240 என்ற சர்வரை தொடர்பு கொள்ளுமா ?. 
அதுதான் சற்று சிக்கலாக இருந்தது. ஏனெனில் இணைய நுட்பங்கள் ஆஸ்கி(Ascii) எனப்படும்  நுட்பத்தை வைத்தே உருவாக்கப்பட்டவை. எனவே உலக மொழிகளுக்கு பயன்படுத்தப்படும் யுனிகோடை இதில் நுழைக்கவேண்டுமெனில் அதற்கென்று தனியாக நிரல்கள் உருவாக்கப்படவேண்டும். 

அதற்கு உருவாக்கப்பட்டவைதான் இந்த  இந்த ஐடிஎன் எனப்படும் இன்டர்நேஷனல் டொமைன் நேம்ஸ் (IDN)

மொழி சார்ந்த வெப்சைட் பெயர்கள் வேண்டுமென்பதை 1996ாம் ஆண்டு மார்ட்டின் டர்ஸ்ட் என்ற அறிவியல் அறிஞர்கள் வேண்டுகோள் விடுக்க 1998ம் ஆண்டு டான் ஜூய் வங்க் மற்றும் லியாக் காக் யங் ஆகியோர்கள் திரு. டி.டபிள்யூ. டான் அவர்களின் வழிகாட்டுதலில் செயல்படுத்தினார்கள். அதுவும் பல கட்டமாக தங்கள் மாதிரிகளை உருவாக்கி செயல்படுத்தியபின்னர்தான் இதை இன்டர்நேஷன் டொமைன் நேம் சிஸ்டம் என்ற கட்டமைப்புக்கு கொண்டு வந்தனர். 

பின்னர் டாப் லெவல் டொமைன் எனப்படும் உயர்நிலை வெப்சைட் பெயர்களான .காம், .ஆர்க், .நெட், ஆகியவற்றிற்கு உருவாக்கின.

இதில் முக்கியமான விசயம் என்னவெனில் வெப்சைட் பெயர்கள் தற்போது உள்ள முறையில் ஆஸ்கி (ASCII-American Standard Code for Information Interchange) எனப்படும் முறையில் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை யுனிகோட் முறைக்கு மாற்றி சில நிரல்களை எழுதினர்.
பின் மார்ச்  2008ஆம் ஆண்டு இணையத்தின் தர கட்டுப்பாடுகளை வகுக்கும் நிறுவனமான ஐஇஎப்டி IEFT ( Internet Engineering Task Force) ஐடிஎன்னை(IDN) அங்கீகரித்தது.

ஐஇஎப்டி என் ஐடிஎன் ஐ அங்கீகரித்தவுடன் வெப்சைட் பெயர்களையும், ஐபி முகவரிகளையும் மேலாண்மை செய்யும் ஐசிஏஎன்என் நிறுவனம் இதை அங்கிகரித்தது. மேலும் மே-2010ம் ஆண்டு முதல்  இணையத்தளத்தில் அந்தந்த நாடுகளின் மொழியில் வெப்சைட் பெயர்களை நிறுவும் நிரலை தன்னுடைய சர்வர்களில் இணைத்தது.


to Ascii code to unicode என்ற அல்காரிதம் வழியாக இந்த பெரும் வாய்ப்பை அளித்திருக்கின்றனர். தமிழ் மொழி என்பது காலத்திற்கேற்ப மாற்றி தன்னை நிலைநிறுத்திக்கொள்கிறது. இது நமக்கெல்லாம் கிடைத்த அரிய பரிசு என்றே கொள்ளலாம். இன்னமும் கணினிக்கே வராத மொழிகள் நிறைய உள்ளது. ஆனால் கணினிகள் வெளிவரத்தொடங்கிய 1985ம் ஆண்டிலேயே தமிழுக்கான மென்பொருட்கள் ஆராய்ச்சிகள் தொடங்கப்பட்டுவிட்டது என்பது நம் அனைவருக்கும் பெருமையான விசயமே.

சரி கணினியில் தமிழ், இணையத்தில் தமிழ் இதனால் என்ன பயன்?


மீன்கள் பிறக்கும்போது அவைகளுக்கு நீந்த யாரும் கொடுப்பதி்லை. பறவைகள் பறப்பது என்பது அதன் இயல்பான நிலை. அதுபோலவே நம் தாய்மொழியில் கல்வி கற்றால் மிக எளிதாக எல்லாவற்றையும் அறிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும் முடியும். ஏனெனில் அவை வழிவழியாக சந்ததி வழியாக வந்தவை.

ஆங்கிலம் தெரிந்திருந்தால் மட்டுமே இணையமும் கணினியும் பயன்படுத்த முடியும் என்ற நிலை மாறிவிடும். யார் வேண்டுமானாலும் படிப்பறிவும், அனுபவ அறிவும் கொண்டவர்கள் கூட அவர்கள் தாய்மொழியில் ஒரு வெப்சைட் அல்லது மின்னஞ்சல்களைக் கூட பெற்றுக்கொள்ள முடியும். 

எனவே அது அனைத்து சாரர்களும் பயன்படுத்த ஏதுவாக இருக்கும்.
ஏற்கனவே ஆங்கிலம் தெரிந்தால்தான் கணினிகளை பயன்படுத்த முடியும் என்ற நிலை மாதிரி கணினி, இன்டரநெட் , மொபைல் ஆகியவற்றை நம் தாய் மொழியிலயே பயன்படுத்தினால் அனைவரும் மிகஎளிதாக தொழில்நுட்பத்தை பெறலாம்.

 எவ்வளவு பெரிய நுட்பம் ஆயினும் கீழ்நிலை பயனாளர்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்தத நுட்பங்கள் எல்லாம் அவரவர்கள் தாய் மொழியில் வெகு எளிதாக பயன்படுத்தலாம்.

இதுவரை நம் தாய்த்தமிழில் இரண்டு தளங்கள் மட்டுமே இதை வெற்றிகரமாக தமது தளத்திற்கு தமிழ்ப்பெயர்களை சூட்டியுள்ளன.

ஒன்று. http://www.முத்தமிழ்மன்றம்.com
இரண்டாவது. http://www.தமிழ்வணிகம்.com

இந்த நுட்பத்திற்காக உழைத்த அனைவருக்கும் நம் நன்றிகளை பகிர்வோம்.
யாருக்கேனும் தமிழில் வேண்டுமென்றால் எங்கள் www.rupeeshost.com நிறுவனத்தை தொடர்புகொள்ளலாம். அல்லது 99430-94945 என்ற எண்ணில் அழைக்கலாம்.















ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------

Sunday, January 2, 2011

"தொடுவானம்" 2010ம் ஆண்டின் சிறந்த தொழில்நுட்ப சேவை

தொடுவானம் பற்றி மத்திய இணையமைச்சர் காந்திசெல்வன்

தொடுவானம் என்ற இணையதளம் மூலம் கிராமத்திலிருந்து மாவட்ட கலெக்டருக்கு மனு அளிக்கும் திட்டத்தில் 1,121 பயனாளிகளுக்கு எந்தவித செலவும் இன்றி, யாரையும் அணுகாமல் நிவாரண உதவி கிடைத்துள்ளது. இணையதளம் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு இணைய தளம் மூலமே சம்மந்தப்பட்ட அலுவலர்களால் பதில்  அளிக்கப்படுகிறது. அரசு திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டு செல்வதிலும், குறைகளை நிவர்த்தி செய்வதிலும் நாமக்கல் மாவட்டம் முதன்மையாக உள்ளது. 



2010ம் ஆண்டில் மிகச்சிறந்த தொழில்நுட்ப சேவை எதுவென்று எடுத்துக்கொண்டால் நிச்சயமாக அது தொடுவானம் என்ற சேவையே இருக்க முடியும்.

அட அப்படியென்னா தொடுவானம் 

ஒரு அழைப்புக்கு நிமிடத்திற்கு 50 ரூபாய் கொடுத்துவந்த செல்போன் சேவை ஒரு நிமிடத்திற்கு 50 காசாகி போச்சு.....

50 நாள் நடந்து போகும் தூரத்தை ஏரோப்ளேன்ல 5 மணி நேரத்தில் கடந்து போக லாம்

அட நம்ம வீட்டில் 50 நிமிசம் ஆகும் சமையல் வேலை 5 நிமிசத்துல கூடி முடிந்து போகுதுங்க.....

இதெல்லாம் எப்படி சாத்தியம்..... 

யாராவது மாய மந்திரம் போட்டுட்டாங்களா என்ன?

இல்லை. எல்லாமே தொழில்நுட்பத்தின் உதவியாக சாத்தியமானது.
மேற்கண்ட செல்போன், ஏரோப்ளேன் என எல்லாமே தொழில்நுட்பம்தான்.

இந்த நுட்பத்தை பயன்படுத்தி அதிகமான நேரத்தினை மிக மிக குறைவாக ஆக்கியது இந்த தொழில்நுட்பம்.

ஆனால் இவையெல்லாம் அனேகமாக மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே பயன்படும். 

அப்படியெனில் 
அடித்தட்டு மக்களுக்கு இந்த நுட்பத்தால் விளைந்த பயன் மேல் தட்டு மக்களுக்கு கிடைத்த அளவு இல்லை.

இந்த தொழில்நுட்பம் அரசாங்கமே இன்றுவரை ஒரளவு தான் பயன்படுத்திவருகிறது. முழுமையாக பயன்படுத்தும் வரை இன்னமும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திவருகிறது.

ஆனால் அரசாங்கம் இந்த தொழில்நுட்பத்தினை எப்படி பயன்படுத்தவேண்டும் என்று ஒரு முன்மாதிரி 2010 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டது தொடுவானம் என்ற பெயரில்

ஆம், நாள்தோறும் மக்கள் தங்கள் குறைகளை தீர்க்க ஒவ்வொரு அரசு அலுவலர்களின் படியேறி அவர்கள் இங்கேயும் அங்கேயும் அலையவைத்து பின்இறுதியாக பலவருடங்களுக்கு பின் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மாற்றாக மக்கள் தங்கள் குறைகளை தீர்க்க அந்த ஊர் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு சென்று புகார் கொடுத்தாலே போதும் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவாக அவர்களின் குறைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

அமெரிக்கவாழ் தமிழரான திரு.ஆல்பர்ட் பெர்ணாண்டோ அவர்களின் முயற்சியாலும்  அப்போதைய நாமக்கல் மாவட்ட ஆட்சியாளரான திரு. சகாயம் அவர்களால் செயல்தீட்டப்பட்டு கடந்த 2010 ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது இந்த தொடுவானம். இணையத்தளம்

தொடுவானம் எனும் இணையத்தளம் மூலம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மக்கள் எல்லாரும் அவர்களுக்கு ஏற்படும் குறைகளையும், அரசாங்க திட்டங்களையும் பெற அரசு அலுவலகங்களுக்கு வரவேண்டிய தேவையில்லாமல் இணையத்தளம் மூலம் எங்கிருந்தும் தங்கள் குறைகளை அனுப்பலாம் என்று அறவிக்கப்பட்ட இன்று வரை  1817 மனுக்கள் பெறப்பட்டு அதில் 1514 மனுக்கள் தீர்வு பெற்றுள்ளன என்பது  மிகப்பெரிய பெருமை.

இந்த 1514 மனுக்களும் அதன் தீர்வு பெற்றவர்களுக்கும் நிச்சயமாக ஒரே ஒரு முறைதான் அரசு அலுவலகங்களுக்கு சென்றிருப்பார்கள் . 

மேலும் அந்த தொடுவானம் திட்டத்தில் நேரடியாக மாவட்ட ஆட்சியரிடம் கலந்துரையாடவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் வழியாக மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் நேரடியாக தங்கள் குறைகளை அவரிடம் எடுத்துசென்று தங்கள் குறைகளையும் தீர்த்திருக்கிறார்கள் என்பது மிகப்பெரிய சேவை.

இப்போது சொல்லுங்கள். எந்த ஒரு குடிமக்களும் அரசு அலுவலகங்களை நாடாமல் , அலையாமல் அவர்கள் வீடு தேடி சென்று குறைகளை தீர்க்கும் இத்தொடுவானம் 2010ம் ஆண்டின் சிறந்த தொழில்நுட்ப சேவைதான். 
பின்னாளில் வரவிருக்கும் மின்னாளுமை அரசுக்கு முன் மாதிரியும் இந்த தொடுவானம் திட்டமும்தான்.

ஆனால் தற்போது மாவட்ட ஆட்சியர் மாற்றப்பட்டபின் இத்திட்டத்தில் சுணக்கம் கண்டுள்ளது வருத்தத்திற்குறியது. எனவே இதுபற்றி இப்போதைய ஆட்சியாளர் சிறப்பு கவனம் செலுத்தினால் பொதுமக்களுக்கு வசதியாய் இருக்கும்.


இதோ உங்களின் எண்ணங்களை நீங்களும் இங்கே பதிவு செய்யுங்கள்.













ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------

Saturday, December 11, 2010

விக்கிலீக்ஸ்- வழியாக லீக் ஆன இந்திய ஆவணங்கள்!!

விக்கிலீக்ஸ்- அதிபர் ஜூலியன் அஸ்ஸஞ்சே நல்லவரா ? கெட்டவரா? என்ற கூறவியலாத அளவிற்கு இருக்கிறது சேதி!

அப்படி என்னதான் செய்தார்?

உலக நாடுகளில் ரகசியமான வகையிலும், முக்கியமான வேலைகளையும் செய்யும் பணிகள் சம்பந்தமான ஆவணங்களை அவர் வெளியிட்டிருக்கிறார்.
அதுவும் உலகிலயே மிக பாதுகாப்புடையது என்று சொல்லப்படும் அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகனில் இருந்தே ஆட்டைய போட்டிருக்கிறார் என்றால் இவர்தான் மிகச்சிறந்த ஹேக்கர் என்று சொல்லாம். வடிவேலு பாணியில் சொல்லப்போனால் களவானித்தனம் பண்ணாலும் நாசுக்காக பண்ணனும்.

இது சரியா? தவறா என்றால்

ஒரு புறம் சரிதான்.
ஏனெனில்
தாம் என்ன செய்தாலும் நம்மை கேட்க யாரும் இல்லை என்று ஆட்டமாடும் அமெரிக்காவிற்கே  ஆப்பு வைத்த புண்ணியம் அவருக்கு உண்டு. அது ஒரு ஊடகமாக எடுத்துக்கொள்ளலாம். 


அரசாங்கம் என்ன செய்தாலும் அதை கண்டுகொள்ளாமல் ஜால்ராபோடும் ஊடகங்களின் நடுவிலயே ஊடகத்தின் கடமையை மிகச்சரியாக செய்திருக்கிறார்.

தகவல்கள் எல்லாம் வெளியிட்டபின் தான் தகவல்கள் களவாடப்பட்டுள்ளன என்றே மற்றவர்களுக்கு தெரிந்துள்ளது. அப்படியெனில் இவ்வளவு பெரிய விசயத்தை அவர் எப்படி செய்திருப்பார்?

தவறு?

 எழுதப்பட்ட சட்டத்தின் முன் வேண்டுமானால் அவர் குற்றிவாளியாக கருத்தப்படலாம்.

ஆனால் ஒரு நிறுவனம் தான் செய்யவிருக்கும் பணியைப் பற்றிய முக்கியான வழிகாட்டியை அனைவருக்கும் பொதுவாக வெளியிட்டால்  அது மிக தவறான ஒன்று. ஏனெனில் போட்டி நிறுவனம் அதன் செயல்முறையை கண்டறிந்து தன் னை மாற்றிக்கொண்டுவிடும்.
அதுபோன்ற சில ஆவணங்களும் இதில் இருக்கின்றன.


பாசிட்டிவாக பார்த்தால் வரும்கால நுட்ப உலகில் பாதுகாப்புதான் மிக முக்கியமானது என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்தியிருக்கிறார்.

நெகட்டிவாக பார்த்தால் எல்லாமே தவறுதான்.


இந்திய நாடும் இ-கவர்னன்ஸ் அறிமுகப்படுத்தியிருக்கிறது. வளர்ந்துகொண்டிருக்கிறது. நம் நாட்டு அரசு தளங்களே பல முறை பல பேர்களால் தாக்கப்பட்டிருக்கிறது. தாக்கப்பட்டும் கொண்டிருக்கிறது.

பல முறை தாக்கப்பட்டிருக்கிறது என்று கூச்சல் போடும் அரசு தன் பாதுகாப்பை மேம்படுத்தியிருக்கிறதா என்று பார்த்தால் ஏதோ மேம்போக்காகத்தான் செய்திருக்கும்.

சரி நம்ம விசயத்திற்கு வருவோம்!

இந்த அளவிற்கு அவர்களின் எல்லா ஆவணங்களையும் ஏறக்குறைய இப்போதைக்கு  இரண்டரை லட்சம். அதில் அமெரிக்காவுடையது எவ்வளவு என்று தெரியவில்லை.

அமெரிக்கா மற்றும் உலக நாடுகளில் நடைபெற்ற விசயங்களை எல்லாம் வெளியிட்டாலும் இந்தியாவில் இருந்தும் ஆவணங்கள் விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல்களில் இருப்பது ஆச்சர்யம்.

அதுவும் ராணுவ சம்பந்தமான ஆவணங்களும், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட  அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை எனப்படும் Unique Indenfification Authority of india -ன் ஆவணத்தை வெளியிட்டுள்ளது. working paper 1.1 என்று its property of UIDAI என்றும் இருக்கிறது அந்த ஆவணத்தில்.
அப்படி பார்த்தால் இந்தியாவில் இருந்தும் சில ஆவணங்கள் இருக்கிறது.

1.india-army-doctrine-part1-2004 
2.creating-a-unique-id-for-every-resident-in-india-2009
3.india-shoddy-journalism-2008
etc....

.india-army-doctrine-part1-2004 ஆவணத்தில் சிம்லாவில் உள்ள  Headquarters Army Training Command உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதில் போர் என்றால் என்ன? எத்தனை வகையான போர்கள் உள்ளன என்று இருக்கின்றன தகவல்கள்.

நம் இந்திய தேசிய அடையாள அட்டை பற்றிய முழு செயல்திட்டமும் அதில் இருக்கிறது.

இப்படி பல ஆவணங்கள் அதில் இருக்கின்றன! 

இவைகள் எல்லாம் எப்படி வெளியாயின என்று எந்த இந்திய ஊடகமும் எழுதியதாகஅடியேன் பார்வையில் சிக்கவேயில்லை.

ஜூலியன் அஸ்ஸஞ்சே அண்ணே நீங்க நல்லவரா ? கெட்டவரா?

----------------------------------------------------------------------------------------------------------------
ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------

Friday, November 5, 2010

சைபர் கிரைம் யுத்த சகாப்தத்தில் இந்தியா

 ஸ்டக்நெட் - வைரஸ் -  சைபர் கிரைம் யுத்தத்தின்  முக்கிய அஸ்திரம்  
இன்சாட் 4பி மற்றும் சந்திராயன்   ஸ்டக்நெட் தாக்கி அழித்ததா?

ஆசியாவில் எப்போதும் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக  சீனா தன்னை நிலைநிறுத்திக்கொள்ள பெருமளவில் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஒரு பக்கம் தன் நாட்டில் மலிவான விலையில் உலக நாடுகளுக்கு தங்கள் பொருட்களை ஏற்றுமதி செய்துவரும் சீனா அதே சமயம் தன் வியாபார எல்லையையும் , தான் ஆட்சி செய்யப்போகும் எல்லையையும் விரிவுப்படுத்தியே வருகிறது. இது ஒரு புறம் இருக்க தற்போது உலகின் பெரியண்ணனாக இருக்கும் அமெரிக்காவிற்கே சவால் விடும் அளவிற்க்கு துணிந்துள்ளது. 

இந்தியா வான்வெளியில் பலசெயற்கை கோள்களை அனுப்பியும் பின் மற்றநாடுகளுடைய செயற்கை கோள்களையும் செலுத்திவருகிறது. சமீபத்தில் நிலவிற்கு சந்திராயனையும் அனுப்பி வெற்றி கண்டது.

இந்த ஸ்டக்நெட் வைரஸ்  இந்தியாவின் இன்சாட் 4B யினை தாக்கியிருக்கலாம் எனவும் இதனை இந்தியாவின் இஸ்ரோவின் திரவ உந்து ஆய்வு மையத்தின் இரண்டு ஊழியர்கள் சிமென்ஸ் நிறுவனத்தின் Siemens S7-400 PLC and SIMATIC WinCC மென்பொருட்களின் வழியாக  ஸ்டக்நெட் நச்சுநிரலை செயல்படுத்தி அதனை வெப்பநிலையை உயர்த்தி அதனை செயலிழக்கவைத்திருக்கலாம். அந்த அளவிற்கு ஸ்டக்நெட் வைரஸ் சக்தி வாய்ந்தது. அதனால் செய்யவும் முடியும்.


ஸ்டக்ஸ்நெட் வைரசானாது  SCADA( supervisory control and Data Acquisition ) மையமாக கொண்டு செயல்படும் பெரிய நிறுவனங்களில்  மேலாண்மை செய்யவும், கட்டுப்பாடுகளை செய்யவும் உருவாக்கப்பட்டது.  இவைகள் போன்ற மென்பொருள்களின் வழியே ஸ்டக்நெட் வைரஸ்கள் ஊடுருவி மிகப்பெரிய அழிவையே ஏற்படுத்ததும். 


ஸ்டக்நெட்  வைரசானது செயலாக்க செயல்முறைக் கட்டுப்பாட்டை நிர்வகிக்கவும் அதை மறைத்தலுக்கும் ஆன செயல்பாடுகளை உள்ளடக்கியது மேலும் ஏற்கனவே உள்ள நிரல்களை மாற்றிவிட்டு தன்னுள்ள உள்ள நிரல்களை அதன் கன்ட்ரோலர்களுக்கு கட்டளைகளை கொடுக்கும் அளவிற்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது


மேலும் ஸ்டக்நெட் வைரஸ்களால் ராணுவ ஏவுகணைகளையும் தாக்கி அதன் திசையையும் மாற்றிசெயல்படுத்த வைக்கவும் முடியும்.  இந்த ஸ்டக்நெட் வைரசினால் பெரிய அளவில் சீனாவில்தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகப்ட்சமாக 60 லட்சம் கணினிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் 6552 கணினிகளுக்கு இந்த வைரஸ்களினால் பாதிக்கப்பட்டுள்ளன.  

இந்த வகை வைரஸ்களால்  நிச்சயம் சைபர் யுத்தம் பெருகும் என்று மென்பொருள் பாதுகாப்பு நிறுவனமான கேஸ்பர்ஸ்கை அறிவித்துள்ளது. 
இதன் வழியாகத்தான் நம் நாட்டின் இன்சாட் 4பி தாக்கி அழித்துள்ளனர் எனும்போது  இதே போன்ற ஒரு ப்ரச்னைதான் நம் சந்திராயனுக்கும் அப்போது சந்திராயன் ஏன் இதே முறையில் தாக்கப்பட்டிருக்கூடாது? 

நிலவில் அதிகப்படியான வெப்பத்தில் சந்திராயன் செயலிழந்தது என்று கூறினாலும் அதுபற்றி இங்கே சில சந்தேகங்களை எழுப்பவேண்டியதுள்ளது. 
கிட்டத்தட்ட 11 நாடுகளின் உபகரணங்களை ஏந்தித்தான் சந்திராயன் சென்றுள்ளது. அமெரிக்கா, ஐரொப்பிய நாடுகள் ஆகியவற்றின் உபகரணங்களையும் ஏந்தி சென்றுள்ளது. அப்படியெனில் சந்திராயன் வடிவமைக்கும்போது நிலவில் உள்ள வெப்பநிலை மற்றும் இதர காலநிலைகள் பற்றி அமெரிக்காவிற்கு நன்றாகவே தெரிந்திருக்கும். அவர்கள் உபகரணம் எவ்வளவு வெப்பநிலையையும் தாங்கும் என்றும் கலந்துரையாடல் நிச்சயமாக ஏற்ப்பட்டிருக்கும். அப்படியெனில் அவர்கள் அங்கே நிலவும் வெப்பநிலை பற்றி தகவல் பரிமாறிக்கொள்ளவில்லையா?


ஏன் ஸ்டக்நெட் வைரசால் சந்திராயன் தாக்கப்பட்டிருக்கூடாது? இன்சாட்4பியும் வெப்பநிலை மாற்றத்தால் ஏற்பட்ட செயல் இழந்தது.  அந்த வெப்பநிலை மாற்றத்தை உருவாக்கியது ஸ்டக்நெட் வைரஸ் எனும்போது அதே போன்றே ஒரு ப்ரச்னை ஏன் சந்திராயனுக்கும் ஏற்பட்டிருக்க கூடாது.
இன்சாட்4பி ப்ரச்னை பற்றி இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்தி

http://www.isro.org/news/pdf/INSAT-4B_Glitch.pdf


சரி இவைகள் யார் செய்திருப்பார்கள்.

சீனாதான் என்று அனைவராலும் சந்தேக்கிக்கப்படுகிறது. 

முதல் காரணம்.

இன்சாட்4 பி யின் ட்ரான்ஸ்பாண்டர்களை தூர்தர்சன் நிறுவனமும் சன் டிவியின் குழுமங்களும் அதன் ஒளிபரப்புகளுக்காக பயன்படுத்தி அதன் டிடிஎச் சேவைகளையும் அதனுடன் அளித்துவந்தன. ஆனால் இன்சாட் 4பி திடீரென்று வேலை செய்யாத காரணத்தினால் முடங்கிய சன் டிவி ஆசியாசேட்-5 என்ற செயற்கை கோள்க்கு தன்  வாடிக்கையாளர்களை மாற்றியது. ஆசியா சேட் செயற்கை கோள் Asia Satellite Telecommunications Co., Ltd (AsiaSat) ஆசியா சேட்டிலைட் டெலிகம்யூனிகேசன் எனும் நிறுவனத்திற்கு சொந்தமானது. அந்த நிறுவனத்தின் பெருபான்மையான பங்குகளை வைத்திருப்பது ஜெனரல் எலக்ட்ரிக்ட்ஸ் மற்றும்  சீனாவின் இன்டர்நேசன் ல் ட்ரஸ்ட் மற்றும் முதலீட்டு நிறுவனம்.
சரி இவர்கள் ஏன் நம் செயற்கை கோளை தாக்கவேண்டும்? 

காரணம்1
சில நாடுகளின் செயற்கை கோள்களை நம் இஸ்ரோவும் வான்வெளீக்கு கொண்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது நம் நாட்டின் வருவாயாகவும் விளங்குகிறது. வரும்காலங்களில் இதுபோன்று செயற்கை கோள்களை ஏவுவதும், ராணுவ தளவாடங்களை விற்பது மூலமாகத்தான் மிக அதிக அளவில் பொருளீட்டமுடியும்.

காரணம் 2

இப்படி இந்தியாவின் செயற்கை கோள்கள் அடிக்கடி சிக்கலிற்கு உள்ளாகினால் பல நிறுவனங்களை அவர்களையே நாடும்

காரணம் 3:

இந்தியா வும் , சீனாவும் தங்களை வல்லரசுகளாக ஆக்கிக்கொள்ள பெரும் முயற்சிகள் எடுத்துக்கொண்டுவருகின்றன. அதில் முன்னணியில் நிற்பது சீனா. அதோடு தனக்கு அடுத்த வரவிருப்பது இந்தியா என்பதால் இந்தியாவினை தன்னுடைய பார்வையிலயே வைத்துக்கொள்ள நினைப்பதும் ஒரு காரணம். 

ஆக தரைப்படை, குதிரைப்படை, யானைப்படை போய் இனி சைபர் படை ஒன்று இந்தியாவிற்கு தேவை. 
இ-கவர்னன்ஸ் முறை தற்போது இந்தியாவில் வளரவிருக்கிறது. இவைகளையெல்லாம் மனதில் வைத்து ஒரு பாதுகாப்பான சேவையை தரவேண்டுமெனில் இனி இவை எல்லாம் அவசியம். அவசரம்....

உணர்வது யார்?

---------------------------------------------------------------------------------------------------------

ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------

Sunday, October 17, 2010

பிசிசிஐ தலைவர் சீனிவாசன் மொபைல் தாக்கப்பட்டது

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் திரு.சீனிவாசன் அவர்களின் மொபைல் எண் தாக்கப்பட்டு அதிலிருந்து  ஐபில் கிரிக்கெட் அணிகளின் முதலாளிகளுக்கு  "" ஐபிஎல்-ன் முன்னாள் தலைவர் லலித் மோடி யுடன் தொடர்பு வைத்திருந்ததால் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்போவதாக " அந்த எஸ்எம்எஸ்-ல் தகவல் இருந்துள்ளது. இது குறித்து ஐபிஎல் நிறுவனங்களின் முதலாளிகள் சீனிவாசனை அழைத்து விபரம் கேட்டபின் தான் அவருக்கே அந்த தகவல் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து சைபர் கிரைம்  புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சைபர் கிரைம் அலுவலர்கள் அவரின் மொபைல் சேவை வழங்குநர்களிடம் இருந்து தகவல் கேட்டுள்ளதாகவும் இது குறித்து விசாரணை நடப்பதாகவும் கூறியுள்ளனர்.

சரி இப்ப நம்ம விவாதிப்போம்!

இப்படியும் சாத்தியம் உண்டா? என்று கேட்ப்போருக்கு

ஒரு உதாரணம்.

இப்போது எல்லா மொபைல்களும் இணையத்துடன் கூடிய இணைப்புகளுோடுதான் வருகின்றன. இணையம் என்று வரும்போதே பாதுகாப்பு சிக்கல்கள் நிறைய வரும்
.
உதாரணம் ஒரு குறிப்பிட்ட எண்ணில் இருந்து உங்களுக்கு எஸ்எம்எஸ் வரும். அந்த எஸ்எம்எஸ்-ல் இந்த முகவரியில் சென்று உங்களுக்கு தேவையான பாடல்களை தரவிறக்கம் செய்யலாம் என்று வரும். அப்படி அதை கிளிக் செய்யும்போது தாக்குநர்கள் நமது மொபைலை பற்றிய தகவலை முதற்கட்டமாக அறிந்துகொள்வார்கள்.

பின் இதே போன்று ஒரு தகவல்களை அனுப்பி நம்மில் தகவல்களையும் அல்லது அவர்களின் நச்சு மென்பொருட்களை நமது மொபைலிற்கு தரவிறக்கம் செய்துவிட்டால் மேற்கண்ட நிகழ்ச்சிகள் எல்லாம் சாதாரணமாக நடக்கும்.

இணையம் பெருக பெருக, நம் நாட்டின் பாதுகாப்பு கொள்கைகள் மிக அதிக அளவில் கட்டுப்பாடு பெருகும்போதுதான் இது மாதிரியான சிக்கல்கள் ஒரளவு குறையும். அதுவரை இது தொடரும்.............

மேலும் ஒரு உதாரணம்
இன்று ஹேக்கர்கள் மொபைல் போனை காசு கொடுத்து ரீசார்ஜ் செய்யாமல் அந்த நுட்பங்களை அறிந்துகொண்டு அவர்கள் ரீசார்ஜ் செய்கிறார்கள். அது நடக்கவாய்ப்புகள் அதிகம். எப்படி ?

எந்த ஒரு வழங்குநரும் ரீசார்ஜ் செய்வதற்கு ஒரு எண் இருக்கும். அந்த எண்ணிற்கு தகவல் சென்றவுடன் அது அவர்களின் வழங்கியை தொடர்புகொண்டு அந்த வழங்கியில் அடுத்து என்ன செய்யவேண்டும் என்ற தகவல் படி வழங்கியானது செயல்படத்தும். ஸ்கிராஸ்ட்ச் கார்டு -ன் எண்ணை ரீசார்ஜ் செய்யவேண்டிய என்னுடன் சேர்ந்து நம் ப்ரவைடருக்கு அனுப்புவது

ஸ்கிராட்ஸ் கார்ட் எண்ணை பெற்றுக்கொண்ட வழங்கி அந்த எண் சரியான எண்தானா அல்லது வேறு யாரேனும் பயன்படுத்தியிருக்கிறார்களா? என்று சோதனை செய்யும்.

அந்த எண் சரியான எண் என்றவுடன் அது எவ்வளவு ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யப்படுள்ளது மற்றும் அது யாருடைய கணக்கிற்கு சென்று சேரவேண்டும் என்ற வழிமுறைகள் தொடர்ச்சியாக அந்த சேவை வழங்குநரின் வழங்கியில் இருக்கும்.
இப்படித்தான் ஒவ்வொரு முறை நாம் ரீசார்ஜ் செய்யும்போது நடக்கும்.!?
இந்த வழிமுறைகளை கண்டறியும் தாக்கர்கள் சேவை வழங்கியின் வழிமுறைகளை கண்டறிந்து அவர்களுக்கும் அதன் வழிமுறைகளை  கண்டறிந்து அதன் படி இலவசமாக ரீசார்ஜ் செய்துகொள்கிறார்களாம்.

-----------------------------------------------------------------------------------------------------------
ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------