#navlist ul { margin-left: 0; padding-left: 0; white-space: nowrap; } #navlist li { display: inline; list-style-type: none; } #navlist a { padding: 3px 10px; } #navlist a:link, #navlist a:visited { color: #fff; background-color: #036; text-decoration: none; } #navlist a:hover { color: #fff; background-color: #369; text-decoration: none; }

Saturday, July 2, 2011

தமிழக அரசின் லேப்டாப் திட்டம் - பாதுகாப்பானதா..?



" இலவசமாக மாணவர்களுக்கு லேப்டாப் தந்தாலும் அதன் பயன் என்னவென்று அனைவரும் அறிந்துகொள்ளவேண்டும். ஏனெனில் நாம் அவர்களை இந்த லேப்டாப் கொடுத்து வரவேற்க விருப்பது கணினியுகத்திற்கும், மாயவலையான இணயத்திற்கும் அழைப்பிதழ். சற்று தடம் மாறினாலும் மாயவலையின் அடிமையாகிவிடுவார்கள்"


தமிழக அரசின் லேப்டாப் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் திட்டம் எல்லா தரப்பிலும் வரவேற்கப்பட்டாலும்  முழுமையான பாதுகாப்பு இல்லாமல் வெளியிடுவது ஆபத்தான ஒன்று. மேலேகண்ட வளர்ந்த நாடுளில் உள்ள குழந்தைகள் கணினிக்கே அடிமையாகிவிட்ட செய்தியும் இருக்கிறது என்பதினை நாம் மனதில் கொள்ளவேண்டும்

முதலில் உலகம் முழுதும் உள்ள  இளம்வயதினர்  பற்றியும் அவர்கள் கணினி சார்ந் த பொருட்களில் செலவிடும் நேரத்தையும் அறிந்துகொள்ளலாமா?

  • 66%  8- முதல்18-வயதுள்ளவர்களிடம் சொந்த செல்போன் 
  • 76% சதவித குழந்தைகளிடம் ஐபாட் உள்ளிட்ட எம்பி ப்ளேயர்கள்
  • 28% மட்டுமே எவ்வளவு நேரம் கணினியை பயன்படுத்தவேண்டும் என்றும் தெரிகிறது.
  • 30% மட்டுமே தெரிகிறது கம்ப்யூட்டர் கேம்ஸ்ன் விதிமுறைகள்
  • 36% மட்டுமே தெரிகிறது கம்ப்யூட்டரை பயன்படுத்தும் விதிமுறைகள்
  • மீடியாவிற்கு( தொலைகாட்சி, கம்ப்யூட்டர் கேம்ஸ், இணையம்) ஆகியவற்றிற்கு மிகஅதிகமாக அடிமையாகிறார்கள்
  • ஒரு நாளைக்கு ஆடியோ, கணினி, வீடியோ கேம்ஸ் மற்றும் படம் பார்த்திலயே அதிகப்படியான நேரத்தினை செலவிடுகிறார்ள்
  • இணையத்தில் சோசியல் தளங்களிலும், விளையாட்டுகளிலும், வீடியொக்களை பார்ப்பதிலுமே நேரம் அதிகமாக செலவாகிறது
  • 74% o7வது முதல் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் எல்லா சோசியல் தளஙகிறது

இப்படி உலகம் முழுதும் குழந்தைகள் /மாணவர்கள் டிஜிட்டல் யுகத்தில் பெரும்பான்மையான நேரத்தினை செலவிடப்படுகிறது என்ற  அதிர்ச்சி தகவல்  ஒரு புறமிருக்க...

பாமர மாணவ/மாணவியர்கு  லேப்டாப் என்பது வரவேற்கத்தக்கது என்று பாமரர்கள் போல் நாமும் நினைத்தால் அது நிச்சயமாக தவறு..

நம் நாட்டில் தொழில்நுட்ப சட்டத்திட்டங்கள் இன்னமும் முழுமையாக இல்லை. அப்படியெனும் பட்சத்தில் சட்டத்திட்டங்கள் மிகவும் சரியாக இருக்கவேண்டும்.இல்லாவிட்டில் வளர்ந்துவரும் இளம் முறை தவறான வழியில் செல்லாமல் இருக்கும். சமீபத்தில் வெளிவந்த கணக்கெடுப்பில் இந்தியாவின் இந்த நூற்றாண்டில் இளைஞர்கள்தான் மிக அதிகமாக இருப்பார்கள் என்று தெரியவந்துள்ளது. மேலும் வளர்ந்துவரும் யுகத்தில் தொழில்நுட்பம் தெரிந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரித்துவருகிறது. எனவே வளரும் தலைமுறை தொழில்நுட்பம் கற்க வரும்போது வேறு ஏதாவது தளம் வரும். அப்படி வரும்போது  அவர்கள் தடம்மாறினால் அது இன்னமும் சிக்கலாய் முடியும்... ஏனெனில் இளைஞர்களை சரியான பாதையில் செல்ல வழிகாட்டாவிடில் சிக்கல் சமூகத்திற்குத்தான்...

நம் அரசு இலவசமாக லேப்டாப் உடன் தமிழ் தட்டச்சு கீபோர்ட்டு என்று எல்லாம் தருகிறார்கள். ஆனால் ஒரு எச்சரிக்கை!!

கட்டுரை படிக்கும் எல்லாரும் கூகிளில் தேடலில் "அம்மா" என்று தேடிப்பாருங்கள். கிருஷ்ணகிரியில் நடைப்பெற்ற தமிழ் இணையப்பயிலரங்கில் இதை தேடிப்பார்த்த நாங்களே அதிர்ந்துதான் போனோம்.


இப்படியிருக்க மாணவர்கள் இணையத்தில் ஏதாவது தேடப்போய் கிடைத்தால் இது போன்று கிடைத்தால் சிலர் அல்லது பலர் தடம் மாற வாய்ப்புள்ளது. மேலும் பள்ளிகளுக்கும், மாணவர்களுக்கும் இணையத்தை பயன்படுத்துவதில் சட்டத்திட்டங்களும், கட்டுப்பாடுகளையம், தேவையற்ற தகவல்களையும் கட்டுப்படுத்தும் வகையில் மாற்றங்களை செய்தபின் லேப்டாப்களை தரவைக்கலாம். 

மேலும் தமிழை வளர்க்க தேவையான பணிகளை செய்ய ஆட்கள் இல்லையே என்று எல்லலோரும் வருந்திக்கொண்டிருக்க. நம் ஆட்கள் இதுபோன்ற விசயங்களை வளர்ந்துகொண்டிருக்கிறார்கள் சத்தம் இல்லாமல்...

. இவையெல்லாம் கட்டுப்படுத்தாவிடில் சிக்கல்கள் நிச்சயமாக வளரும் சமூகத்திற்குத்தான்

முதலில் என்னென்ன பிரச்னைகள்:

கணினியில் மேல் உள்ள ஆர்வம் ஒருவேளை அவர்கள் கணினிக்கே அடிமையாகிவிட்டால் முதலுக்கே மோசமாகிவிடும்.

இணையமும், இணையத்தில் உள்ள சோசியல் தளங்களும் மாணவர்களின் பெரும்பான்மையான நேரத்தினை எடுத்துக்கொள்கிறது. 

சைபர் சட்டம் பற்றி தெரியாமல் சைபர் குற்றம் சார்ந்த ஏதேனும் குற்றத்தை செய்துவிட்டால்

தேவையில்லாமல் இணையத்தையும் கணினியையும் அதிகமாக பயன்படுத்தினால் படிப்பும் குறையும், கணினி சார்ந்த நோய்களும்வரும்....

இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்....

சரி இவ்வளவு பிரச்னைகள் இருக்கிறது. எப்படி சரி செய்ய

இந்த பிரச்னைக்கான லகான் அரசு மட்டும் அரசு சார்ந்த நிறுவனங்கள் மூலமே செய்ய முடியும். அல்லது பெற்றோர்களின் கண்காணிப்பு இருக்கவேண்டும். அப்படியும் இல்லையெனில் மாணவ/மாணவியருக்கு சைபர் கிரைம் சட்டத்திட்டங்கள் தெரிந்திருக்கவேண்டும். மேலும் சுயக்கட்டுப்பாடும் வேண்டும்

அரசாங்கம் என்ன செய்யவேண்டும் ?

 தேவையான தளங்களை மட்டுமே பார்க்க முடியும்படி செய்யலாம்.

சமூக இணையத்தளங்களை குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே பயன்படுத்த செய்யலாம்.

பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு மின்னஞ்சல் முகவரி நேரடியாக பள்ளியில் இருந்து தரும் வசதி. 

ஆபாச வார்த்தைகள் தேடினாலும் கிடைக்காமல் செய்யவேண்டும்.  

அரசாங்கமே ஒரு பொதுவான இணையத்தளத்தை வெளியிட்டு அதிலியே மாணவர்களுக்கு தேவையான மென்பொருள்கள் , தேடும் வசதி, மின் புத்தகம் வசதி , கல்விக்கான வீடியோ என்று எல்லா இணைப்பையும் தரலாம்.

இவைகளெல்லாம் தனித்தனியாக செய்யப்படாமல் அரசாங்கமே ஒரு பொதுவான DNS SYSTEM வழியாக மேற்கண்ட பணிகளை எல்லாம் செய்யலாம்.
பெற்றோர்கள் என்ன செய்யவேண்டும்?

மேலும் பெற்றோர்கள் தேவையற்ற இணையதளங்களை வேண்டாமென்று சொன்னால் அதை தடுக்க தனி மென்பொருள்.

முடிந்தவரை கணினியை அவர்களின் படுக்கையறையில் வைக்காமல் பொது இடத்தில் வைத்தால் கணினியை அதிகமாக பயன்படுத்துவது குறையும்.

அவர்கள் கணினியின் வழியாக என்ன செய்யவேண்டும் என்று சொல்லித்தரவேண்டும்.

மாணவ/மாணவியர்கள் என்ன செய்யவேண்டும்

தங்களுக்கென தனி இலக்கை நிர்ணயித்து அதற்கேற்றார்ப்போல் சரியான பாதையில் பயணிக்கவேண்டும். 

இவற்றில் முக்கியமான லாகன் அரசாங்கத்திடமும், பெற்றோர்களிடமும்தான் இருக்கிறது. எனவே இதையெல்லாம் அரசாங்கம் அறிந்துகொள்ளவேண்டும். 

பலவித சிக்கல்கள் உள்ள இந்த விசயத்தை அரசாங்கம் சாதாரணமாக எடுத்துக்கொண்டு செயல்படுவது ஆச்சரியமாகத்தான் உள்ளது.
இது குறித்து அரசாங்கத்திற்கு விழிப்புணர்வு வேண்டும்.


இவையெல்லாவற்றையும் விட மிக முக்கியமாக கூகிள் நிறுவனத்திற்கு இதுபோன்ற வார்த்தைகள் தேடினால் தளத்தை ஓபன் செய்யாதிருக்க அல்லது தேடலில் காட்டாமல் இருக்க கேட்டுக்கொள்ளப்படவேண்டும். கூகிள் மட்டுமல்லாமல் எல்லா தேடல் தளங்களும் இதை செய்யவேண்டும்.


இல்லாவிடில் சிக்கல் யாருக்கு?


............... .....................................................................உங்கள் எண்ணத்திற்கே......


-----------------------------------------------------------------------------------------
ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------

8 comments:

வினோத் ராஜன் said...

ஆம்.

அடுத்து சி.டி டிரைவ் டி.வி.டி டிரைவ் முதலியவற்றை முடக்க வேண்டும்.

பின்ன.. நெட் இருக்கோ இல்லையோ சி.டி டி.வி.டி’கு பஞ்சம் ஏது. ஆரும் சி.டி, டி.வி.டியை லேப்டாப்போடு புழங்கப்படாது.

இன்னும் சொல்லப்போனால், மீடியா பிளேயரில் வீடியோவே கூட வரக்கூடாது. ஃபோட்டோ வியூவரில் ஃபோட்டோவும் கூடாது.

இவை அனைத்தையும் செய்தால், செய்தால் லேப்டாப்பை பத்திரமாக ஆயுத பூஜை அன்று மட்டுமல்லாமல் வருடம் முழுவதும் பூஜை ரூமில் வைத்து பூஜை செய்து கொள்ளலாம் :-)

செல்வமுரளி said...

இளமை பேசுகிறது.... வினோத்...

idroos said...

Good Information and Thank you.

Anonymous said...

கட்டுரை படிக்கும் எல்லாரும் கூகிளில் தேடலில் "அம்மா" என்று தேடிப்பாருங்கள். கிருஷ்ணகிரியில் நடைப்பெற்ற தமிழ் இணையப்பயிலரங்கில் இதை தேடிப்பார்த்த நாங்களே அதிர்ந்துதான் போனோம்

ithu ondre pothum ithn visayam evalavu aabathaanathu endru...

Anonymous said...

வாழ்த்துக்க்கள் முரளி,

LIYAKKATH said...

உங்களுடைய நல்ல எண்ணத்திற்கு மிக்க நன்றி. அம்மா என்று கூகிளில் தேடிய பொழுது நானும் அதிர்ந்து போனேன்.
இது போன்ற செய்திகளை முதல்வரிடமும் உரிய அதிகாரிகள் இடமும் தெரிவிக்க வேண்டும்.

நன்றி

லியாக்கத்

Murugeswari Rajavel said...

சிறப்பான இடுகை முரளி.சமுதாய நோக்கோடு கூடிய உங்கள் சிந்தனை பாராட்டுக்குரியது.இணைய உலகில் சிறப்பான விதத்தில் தடம் பதிக்கும் நீங்கள் பற்பல உயரிய செயல்பாடுகளுக்கு வழிகாட்டுவீர்கள் என்பது உறுதி.

ADMIN said...

நீங்கள் சொல்வது முற்றிலும் ஏற்கத்தக்கதுதான் நண்பரே.. நான் கூட தமிழ் என்று கூகுள் தேடலில் தேடும்போது அதிர்ச்சிக்குள்ளாக நேர்ந்தது.. ஆனால் அதைப் பகிர்ந்துகொள்ள மனம் இடம்தரவில்லை.. ஏனெனில் பகிரும்போது அதுவும் நிறைய பேரை சென்றடையும் என்பதால்..!