#navlist ul { margin-left: 0; padding-left: 0; white-space: nowrap; } #navlist li { display: inline; list-style-type: none; } #navlist a { padding: 3px 10px; } #navlist a:link, #navlist a:visited { color: #fff; background-color: #036; text-decoration: none; } #navlist a:hover { color: #fff; background-color: #369; text-decoration: none; }

Monday, January 16, 2012

தமிழர்களின் வானவியல் சி்ந்தனைகள்



நன்றி!: 


தமிழிரின் வானவியல் சிந்தனைகள் : ஆசிரியர் ஐயம் பெருமாள். உலகத்தமிழராய்ச்சி நிறுவனம் மற்றும் சென்னைப் பதிப்பகம்


தற்போது எந்த கிரகம் எங்கேயுள்ளது என்று பார்க்கவேண்டுமானால் கூகிளின் ஸ்கை மேப் துணைக்கொண்டு எங்கே இந்த கிரகம் உள்ளது என்று அறியலாம்.

ஆனால் இதே நேரத்தில் பஞ்சாங்கம் ஆட்களை அழைத்து கேட்டால் முழுமையான தகவல்களை சொல்வார்கள். எப்படி சாத்தியம் இது ? எதையும் காண முடியாது. ஆனால் அவர்கள் கூறும் தகவல்கள் மிகச்சரியாக இருக்கும்

ஆனால் செயற்கைகொள் எல்லாம் வராத ஆதிக்காலங்களில் மனிதன் எதைக்கொண்டு கணக்கினை அளந்தான் என்று பார்த்தால் தன் கணக்கால் வகுத்திருக்கிறான்.

பலங்காலத்தில் நேரத்தினை கணிக்கும் முறையினை வானத்தைக் கொண்டே கணித்தார்கள். அவர்கள் எப்படியெல்லாம் கணித்தார்கள் என்பதற்கு என்ற தகவலை தேடி பயணதித்தபோது இன்னமும் நிறைய தகவல்கள் கிடைத்தது.

சென்னைப் புத்தக கண்காட்சியில்  வாங்கி புத்தகத்தில் உள்ள சில தகவல்கள்

எல்லாம் சங்ககாலங்களில் உள்ள இலக்கியங்களில் உள்ளன. இங்கே இன்னொரு உண்மையான தகவல்களை சொல்லியாகவேண்டும். அவையெல்லாம் என்னவெனில் இன்றைய வானிலை ஆராய்ச்சிகளுக்கு முன்பாகவே வெறும் கண்களாலேயே இப்போது இந்த கிரகம் எங்கே உள்ளது என்பதை கணிக்கும் திறன் நம்மாட்களிடம் உள்ளது. அதற்கென தனி கணித சூத்திரங்களே  வைத்திருக்கிறார்கள் நம்மாட்கள்.

சிலப்பதிகாரம், பரிபாடல், திருவாசகம் உள்ளிட்டவைகள் தன்னிடத்தே அக்கால தமிழர்களின் வான்வெளி அறிவையும் வெளியிட்டுள்ளனர். பொன்னியில் செல்வனில் கூட கல்கி அவர்கள் தூமகேது என்ற நட்சத்திரம் பற்றி கூறியிருப்பார்.

அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.

அண்டப்பகுதியின் உண்டைப்பிறக்கம்
அளப்பருந்தன்மை வளப்பெருங்காட்சி

என்று மாணிக்கவாசகர் திருவாசகத்தில் கூறுகின்றார்.

எண்ணிறந்த கோளங்களை உள்ளடக்கியது பேரண்டம் என்ற பொருளின் அடிப்படையில் மேற்கண்ட வரிகள் உள்ளன என்பதை காணவேண்டியுள்ளது.


20ம் நூற்றாண்டில்  எட்வின் ஹப்பிள் இந்த பேரண்டமானது தொடர்ந்து விரிவடைந்து வருகிறது,,  பலகோடி அண்டங்கள் ஒன்றைவிட்டு ஒன்றை விட்டு ஒன்றை விளக்கமுறுகின்றன என்று கூறியுள்ளார்.

இதே கருத்தை ஒப்பிடும் வகையில் திருவாதவூராரின் திருவண்டப்பகுதியின் மூன்றாம், நான்காம் வரிகள்

ஒன்றனுக்கொன்று நின்றழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்படவிரிந்தன
என்று கூறுகிறார்.
அதாவது விரவிச்செல்லும் அண்டங்கள் அவரது பார்வையில் சூரியனது ஒளிக்கதிர் இருண்ட அறையில் செல்லும்போது அவற்றில் அலைந்து திரியும் தூசுகள் போல் எண்ணிக்கையில்  பலவாக இருப்பது போல் தெரிகிறதாம் என்று கூறுகிறார்.

நமது வான்வெ ளி ஆராய்ச்சி பற்றி நமது இலக்கியங்களில் நாம் நிறைய ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. நமது வான் வெளியியல் பற்றி தகவல்களை

  • சிலப்பதிகாரம்
  • நெடுநெல்வாடை
  • திருவாசகம்,
  • புறநானுறு
  • சீவகசிந்தாமணி
  • சூளாமணி
  • பரிபாடல்
  • மலைபடுகடாம்
  • சிறுபாணாற்றுப்படை
  • பாலகாண்டம்
  • கம்பராமாயணம்
  • குறுந்தொகை
  • கலித்தொகை
  • மணிமேகலை
  • திருக்குறள்
  • பட்டினபாலை
  • பொருநராற்றுப்படை
  • தொல்காப்பியம்


ஆகியவற்றில் வெளிரவந்துள்ளன.

எனவே இவற்றை முழுமையாக ஆராய்ச்சி செய்தால் இன்னமும் நிறைய தகவல்கள் கிடைக்கும்











ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------

No comments: